Don't Miss!
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
கட்டாந்தரையில் கையை வைத்து தூங்கும் மம்முட்டி... ரசிகர்கள் உருக்கம்
திருவனந்தபுரம் : மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் மம்முட்டி. இவரது இயல்பான நடிப்பு இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்போது இவர் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.
மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெரிய கவுரவம்...குவியும் பாராட்டுக்கள்
நடிகர் மம்முட்டி
நடிகர் மம்முட்டி மலையாளத்தில் முன்னணி நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர். இவரது நடிப்பில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கிலும் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
நண்பகல் நேரத்து மயக்கம் படம்
மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிச்சேரி என்பவரது இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் மம்முட்டி இந்தப் படத்தில் தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை வெறும் 17 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் லிஜோ ஜோஸ்.
லிஜோ ஜோஸ் இயக்கம்
முன்னதாக அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதைக்களங்களுடன் புதியவர்களையும் குணச்சித்திர நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கி வந்த லிஜோ ஜோஸ் முதல் முறையாக மலையாளத்தின் லீட் ஹீரோவான மம்முட்டியை வைத்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
வித்தியாசமான டீசர்
படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தலைப்பின் காரணமாகவோ என்னவோ இந்த டீசரில் ஆடு, கோழி முதல் படத்தின் கேரக்டர்கள் அனைவரும் தூங்கும் வகையில் அமைந்துள்ளது.
கட்டாந்தரையில் தூங்கிய மம்முட்டி
நடிகர் மம்முட்டியும் கட்டாந்தரையில் கையை வைத்து தூங்கும்படியாக இந்த டீசரில் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை மம்முட்டியே தனது மம்முட்டி கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.