Don't Miss!
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- News திடீர் மாரடைப்பு.. பிரபல தாதா முக்தார் அன்சாரி உயிரிழப்பு.. பதற்றம் - 144 தடை உத்தரவு
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Automobiles பிரசார வேனை சொகுசு பங்களா போல செட்டப் செய்த கமலஹாசன்! இதை பார்க்கவே கூட்டம் குவியுமே!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
கட்டாந்தரையில் கையை வைத்து தூங்கும் மம்முட்டி... ரசிகர்கள் உருக்கம்
திருவனந்தபுரம் : மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டவர் நடிகர் மம்முட்டி. இவரது இயல்பான நடிப்பு இவருக்கு ரசிகர்கள் பட்டாளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. தற்போது இவர் மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.
மம்முட்டி, மோகன்லாலுக்கு கிடைத்த பெரிய கவுரவம்...குவியும் பாராட்டுக்கள்
நடிகர் மம்முட்டி
நடிகர் மம்முட்டி மலையாளத்தில் முன்னணி நடிகராக ரசிகர்களை கவர்ந்து வருபவர். இவரது நடிப்பில் பல சூப்பர்ஹிட் படங்கள் வெளியாகி வரும் நிலையில் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். தெலுங்கிலும் தற்போது புதிய படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.
நண்பகல் நேரத்து மயக்கம் படம்
மலையாளத்தில் நண்பகல் நேரத்து மயக்கம் என்ற படத்தில் லிஜோ ஜோஸ் பள்ளிச்சேரி என்பவரது இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார் மம்முட்டி இந்தப் படத்தில் தமிழ் நடிகை ரம்யா பாண்டியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படத்தை வெறும் 17 நாட்களில் எடுத்து முடித்துள்ளார் லிஜோ ஜோஸ்.
லிஜோ ஜோஸ் இயக்கம்
முன்னதாக அங்கமாலி டைரீஸ், ஜல்லிக்கட்டு என வித்தியாசமான கதைக்களங்களுடன் புதியவர்களையும் குணச்சித்திர நடிகர்களையும் வைத்து படங்களை இயக்கி வந்த லிஜோ ஜோஸ் முதல் முறையாக மலையாளத்தின் லீட் ஹீரோவான மம்முட்டியை வைத்து இந்தப் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
வித்தியாசமான டீசர்
படத்தின் சூட்டிங் நிறைவடைந்த நிலையில் தற்போது படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தலைப்பின் காரணமாகவோ என்னவோ இந்த டீசரில் ஆடு, கோழி முதல் படத்தின் கேரக்டர்கள் அனைவரும் தூங்கும் வகையில் அமைந்துள்ளது.
கட்டாந்தரையில் தூங்கிய மம்முட்டி
நடிகர் மம்முட்டியும் கட்டாந்தரையில் கையை வைத்து தூங்கும்படியாக இந்த டீசரில் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இந்தக் காட்சி ரசிகர்களிடையே மிகுதியான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை மம்முட்டியே தனது மம்முட்டி கம்பெனி மூலம் தயாரித்துள்ளார்.