மம்முட்டியின் மகனின் 'செகண்ட் ஷோ'!

இந்தப் படத்துக்கு செகண்ட் ஷோ என தலைப்பு வைத்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குநர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறுகையில், "மம்முட்டியின் மகன் துல்ஹர் சல்மான் செகண்ட் ஷோ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
கிராமத்தில் வாழும் ஏழை இளைஞனாக நடிக்கும் அவர், இந்தப் படத்தில் எந்த வேலையையும் செய்ய தயாராக இருக்கிறார். நல்ல துடிப்பான இளைஞர். அவருக்கு ஜோடியாக புதுமுகம் கவுதமி நாயர் நடிக்கிறார். வில்லன் நடிகர் பாபுராஜும் இந்த படத்தில் இடம் பெறுகிறார்.
இந்த படத்தில் இந்தி நடிகர் சுதேஷ் பெரியும் நடிக்கிறார். அவர் இயக்குனர் மணி ரத்தினத்தின் 'அக்னி நட்சத்திரம்' என்ற படத்தில் நடித்தவர்,'' என்றும் ஸ்ரீநாத் ராஜேந்திரன் கூறினார்.
இது பற்றி நடிகர் மம்முட்டி கூறுகையில், "எனது மகன் சினிமாவில் நடிப்பது அவரது விருப்பம். அவர் நடிக்கும் சினிமாவின் கதையை மட்டும் நான் கேட்டுக் கொண்டேன். வேறு எதிலும் தலையிடவில்லை," என்றார்.
ஆரம்பத்தில் துல்ஹரை தமிழில் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டிருந்தார் மம்முட்டி. ஆனால் அது முடியாமல் போனதாக வருத்தத்துடன் கூறியிருந்தது நினைவிருக்கலாம். துல்ஹர் பிறந்து, வளர்ந்து படித்ததெல்லாம் சென்னையில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











