Don't Miss!
- News இரட்டை இலை.. புது சிக்கல்.. விடாமல் துரத்தும் ஓபிஎஸ் டீம்.. தேர்தல் ஆணையத்திற்கு புகழேந்தி அவசர மனு!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
அவ்ளோ பெரிய டைரக்டர் கூப்பிடறார்... எப்படி நோ சொல்றது?- நானி
மம்முட்டி மகன் துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடிப்பில், மணி ரத்னம் உருவாக்கியுள்ள அடுத்த படமான ஓகே கண்மணியை முதலில் தமிழில் மட்டும் வெளியிடுவதாகத்தான் திட்டமிட்டிருந்தார்.
ஹீரோ ஹீரோயின் இருவருமே மலையாளிகள் என்பதால் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியிடத் திட்டமிட்டார் (கேரளாவில் அதிகமாக ஓடுவதும் நேரடித் தமிழ்ப் படங்கள்தானாம்).
இந்த நிலையில் படத்தை தெலுங்கிலும் வெளியிடும் ஆசை வந்துவிட்டதாம். உடனே அவர் தெலுங்கு டப்பிங்குக்காக பக்காவாக ஆள்தேடினார். நினைவில் பளிச்சிட்டவர் நடிகர் நானி.
அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், துல்கர் சல்மானுக்காக தெலுங்கு டப்பிங் பேச சம்மதமும் பெற்றுவிட்டார்.
இதுகுறித்து நடிகர் நானி கூறுகையில், "அவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரே போனில் கூப்பிட்டு டப்பிங் பேசக் கேட்கும்போது மறுக்கவா முடியும்?" என்றார்.
ஓகே கண்மணியின் தெலுங்கு உரிமையை தில் ராஜூ பெற்றுள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் ஓகே பங்காரம்!
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.