Don't Miss!
- Finance CHATGPT முதல் இந்திய ஊழியரை நியமித்தது.. யார் இந்த பிரக்யா மிஸ்ரா..?
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- News 2019 vs 2024: 35 தொகுதிகளில் வாக்குப்பதிவு கடும் சரிவு.. 4 தொகுதிகளில் மட்டும் உயர்வு.. எங்கெங்கு?
- Lifestyle தக்காளி சட்னி செய்யும் போது இந்த ஒரு பொருளை மட்டும் அதிகமா சேர்த்துக்கோங்க.. டேஸ்ட் சூப்பரா இருக்கும்..
- Sports மொத்த பேட்டிங் ஆர்டரும் மாறிப்போச்சு.. ருதுராஜ் செய்த சொதப்பல்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம் என்ன?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
அவ்ளோ பெரிய டைரக்டர் கூப்பிடறார்... எப்படி நோ சொல்றது?- நானி
மம்முட்டி மகன் துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடிப்பில், மணி ரத்னம் உருவாக்கியுள்ள அடுத்த படமான ஓகே கண்மணியை முதலில் தமிழில் மட்டும் வெளியிடுவதாகத்தான் திட்டமிட்டிருந்தார்.
ஹீரோ ஹீரோயின் இருவருமே மலையாளிகள் என்பதால் கேரளாவில் நேரடி தமிழ்ப் படமாகவே வெளியிடத் திட்டமிட்டார் (கேரளாவில் அதிகமாக ஓடுவதும் நேரடித் தமிழ்ப் படங்கள்தானாம்).
இந்த நிலையில் படத்தை தெலுங்கிலும் வெளியிடும் ஆசை வந்துவிட்டதாம். உடனே அவர் தெலுங்கு டப்பிங்குக்காக பக்காவாக ஆள்தேடினார். நினைவில் பளிச்சிட்டவர் நடிகர் நானி.
அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர், துல்கர் சல்மானுக்காக தெலுங்கு டப்பிங் பேச சம்மதமும் பெற்றுவிட்டார்.
இதுகுறித்து நடிகர் நானி கூறுகையில், "அவ்வளவு பெரிய டைரக்டர் அவர். அவரே போனில் கூப்பிட்டு டப்பிங் பேசக் கேட்கும்போது மறுக்கவா முடியும்?" என்றார்.
ஓகே கண்மணியின் தெலுங்கு உரிமையை தில் ராஜூ பெற்றுள்ளார். தெலுங்கில் இந்தப் படத்துக்குப் பெயர் ஓகே பங்காரம்!
ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள படத்தின் பாடல்கள் அடுத்த வாரம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.