twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நான் ஏங்க டிவி சீரியலில் நடிக்கப் போறேன்... ஆத்திரப்படும் மன்சூர் அலிகான்!

    By Mayura Akilan
    |

    எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் டிவி சீரியலில் நடிக்கமாட்டேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியுள்ளார்.

    ரஜினி, கமல் போல நடிப்பாராம்

    ரஜினி, கமல் போல நடிப்பாராம்

    ரஜினி, கமல் வரிசையில் (???)கடைசி வரை திரைப்படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் அவர் சத்தியம் செய்துள்ளார்.

    லொள்ளு தாதா

    லொள்ளு தாதா

    தமிழ்நாட்டு ரசிகர்களை மிரட்டுவதற்காகவே சிலர் ஹீரோவாக படத்தில் நடிக்கின்றனர். பவர் ஸ்டார் கொடுமைப்படுத்துவது பத்தாது என்று மன்சூர் அலிகானும் ரசிகர்களை பயமுறுத்துவதற்காக ஹீரோவாக நடித்துள்ள படம் லொள்ளு தாதா பராக் பராக்.

    ஏன் இந்தக் கொலை வெறி?

    ஏன் இந்தக் கொலை வெறி?

    ஏன் இந்த கொலைவெறி என்று கேட்டால், எனக்கு திருப்தி வரும் வரை நான் நடித்துக்கொண்டே இருப்பேன் என்று வேறு காரணம் கூறுகிறார். மன்சூர் அலிகான் சினிமாவில் நடிக்க வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. 150 படங்களில் நடித்தும் இன்னமும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லையாம். இதற்காகவே ஹீரோவாக நடிக்கிறாராம்.

    புரட்டிப் போடும் புதுக் கட்சி!

    புரட்டிப் போடும் புதுக் கட்சி!

    அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக கூறும் மன்சூர் அலிகான், தமிழகத்தையே புரட்டிப்போடுவது போல கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறியிருக்கிறார். (இது வேறயா?)

    கோடி கொடுத்தாலும் நோ சீரியல்!

    கோடி கொடுத்தாலும் நோ சீரியல்!

    டிவி சீரியலில் நடிப்பீர்களா என்று கேட்டதுதான் தாமதம். கொதித்து எழுந்து விட்டார். எத்தனை கோடி கொடுத்தாலும் டிவியில் நடிக்க மாட்டேன். கடைசி வரை சினிமாவில் மட்டும்தான் நடிப்பேன் என்று சூடம் அணைக்காத குறையாக சத்தியம் செய்துள்ளார் மன்சூர் அலிகான்.

    English summary
    Actor Mansoor Ali Khan will not enter into TV serials, he said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X