Don't Miss!
- Finance AC வாங்கப் போறிங்களா? இந்த தவறை பண்ணிடாதீங்க.. முதல்ல இதை நோட் பண்ணுங்க!
- News சென்னைக்கு வரப்போகும் புல்லட் ரயிலை விடுங்க.. அதைவிட சிறப்பான சூப்பர் சம்பவம் இருக்கு.. இதை பாருங்க
- Sports இதுதான் கிரிக்கெட்.. அஷுதோஷ் சர்மாவிடம் கற்றுக் கொள்ள ஆவலாக உள்ளேன்.. சூர்யகுமாரே சொல்லிட்டாரு!
- Lifestyle இந்தியாவில் இன்றும் ராஜவாழ்க்கை வாழும் அரச குடும்பங்கள்..இவங்களுக்கு எங்க இருந்து இவ்வளவு பணம் வருது தெரியுமா?
- Technology புது ரூல்ஸ்.. தேர்தல் முடிந்ததும் அமல்.. இனி 24 மணி நேரம் தான்.. ரயில் டிக்கெட் சேவையில் 2 பெரிய மாற்றங்கள்!
- Automobiles போன தடவ சிவப்பு நிற சைக்கிள்.. இந்த முறை இன்னோவா கார்.. இந்த கார் வாயிலாக அவர் என்ன சொல்லியிருக்கார்?
- Travel சென்னையிலிருந்து சம்மர் ஸ்பெஷல் வந்தே பாரத் ரயில்கள் – திருச்சி, மதுரை, நாகர்கோவில்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
கிளாஸ், கிளாசிக், அருமை: செக்கச் சிவந்த வானத்தை கொண்டாடும் மகேஷ் பாபு
ஹைதராபாத்: செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார் நடிகர் மகேஷ் பாபு.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு இயக்குனர் மணிரத்னத்தின் தீவிர ரசிகர். இந்நிலையில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்தி வரும் செக்கச் சிவந்த வானம் படத்தை பார்த்துள்ளார் மகேஷ் பாபு.
படத்தை பார்த்த அவர் ட்விட்டரில் அதை பாராட்டித் தள்ளியுள்ளார்.
|
மகேஷ் பாபு
அருமையான நடிப்பு...ஏ.ஆர். ரஹ்மான் ....இணையில்லை, சந்தோஷ் சிவன்---கிளாஸ். மணிரத்னம் ரசிகனாக சென்னையில் உள்ள தியேட்டர்களில் அவரின் படங்களை பார்த்து கை தட்டுவது உண்டு. இன்று என் வீட்டு தியேட்டரில் பார்த்துவிட்டு கை தட்டினேன் என்று மகேஷ் பாபு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
|
தியேட்டர்
படத்தை பார்த்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அதை பார்க்காதவர்களை பார்க்குமாறு வலியுறுத்தியுள்ளார் மகேஷ். மாஸ்டர் இஸ் பேக் என்று பெருமிதம் கொண்டுள்ளார்.
|
படம்
ஒரு வாரத்திற்கு முன்பு ரிலீஸான படத்தை எப்படி ஹோம் தியேட்டரில் பார்த்தீர்கள். உங்களை போன்ற சூப்பர் ஸ்டாருக்கு இது நல்லது இல்லை..எப்படி வீட்டில் பார்த்தீர்கள்...திருட்டு டிவிடி தானே? பிரபலங்களே இப்படி செய்தால் சினிமா எப்படி வளரும் என்று விஜய் ரசிகர் ஒருவர் மகேஷ் பாபுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
|
சிம்பு
செக்கச் சிவந்த வானம் படம் ரிலீஸானதில் இருந்து சிம்பு ரசிகர்களை கையிலேயே பிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு மகிழ்ச்சியில் உள்ளனர்.