ஹீரோ .. ஹீரோ ..
மே தினத்தை முன்னிட்டு கல் உடைக்கும் தொழிலாளர்கள் 1000 பேருக்கு நடிகர் விஜய் இலவச, வேட்டி சேலைகள் வழங்கினார்.
சென்னையை அடுத்த பம்மல் காமராஜர்புரத்தில் கல் உடைக்கும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தொழிலாளர் தினத்தைகொண்டாடினர். இவ்விழாவில் நிடிகர் விஜய் கலந்து கொண்டார்.
ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலைகளும், 150 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டையும், 500 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் விஜய்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:
தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு வகையில் நானும் தொழிலாளி தான். உங்களின் உழைப்பும், வியர்வையும்தான் எங்களை வாழ வைக்கிறது.
நீங்கள் தலை குனிந்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும், சென்னை நகரை தலை நிமிரவைக்கிறது. தியேட்டர்களில் நீங்கள் கொடுக்கும் பணம் தான் எனக்கு சம்பளமாகவருகிறது. அந்த வகையில் நானும் ஒரு கூலி தொழிலாளி தான். நீங்கள் கொடுத்தபணத்தை உங்களுக்கே செலவிடுவதில் எனக்கு திருப்தி என்றார்.
தொழிலாளர்கள் மத்தியில் ""என்னை தாலாட்ட வருவாளா... என்ற பாடலையும்விஜய் பாடினார்.


Click it and Unblock the Notifications











