Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
ஹீரோ .. ஹீரோ ..
மே தினத்தை முன்னிட்டு கல் உடைக்கும் தொழிலாளர்கள் 1000 பேருக்கு நடிகர் விஜய் இலவச, வேட்டி சேலைகள் வழங்கினார்.
சென்னையை அடுத்த பம்மல் காமராஜர்புரத்தில் கல் உடைக்கும் கூலி தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். அவர்கள் தொழிலாளர் தினத்தைகொண்டாடினர். இவ்விழாவில் நிடிகர் விஜய் கலந்து கொண்டார்.
ஆயிரம் பெண்களுக்கு இலவச சேலைகளும், 150 ஆண் தொழிலாளர்களுக்கு வேட்டி சட்டையும், 500 மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்களும் விஜய்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் விஜய் பேசியதாவது:
தொழிலாளர் தினத்தில் தொழிலாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு வகையில் நானும் தொழிலாளி தான். உங்களின் உழைப்பும், வியர்வையும்தான் எங்களை வாழ வைக்கிறது.
நீங்கள் தலை குனிந்து அடிக்கிற ஒவ்வொரு கல்லும், சென்னை நகரை தலை நிமிரவைக்கிறது. தியேட்டர்களில் நீங்கள் கொடுக்கும் பணம் தான் எனக்கு சம்பளமாகவருகிறது. அந்த வகையில் நானும் ஒரு கூலி தொழிலாளி தான். நீங்கள் கொடுத்தபணத்தை உங்களுக்கே செலவிடுவதில் எனக்கு திருப்தி என்றார்.
தொழிலாளர்கள் மத்தியில் ""என்னை தாலாட்ட வருவாளா... என்ற பாடலையும்விஜய் பாடினார்.