சூர்யாவுக்கு கை கொடுத்த மீரா மிக இக்கட்டான நிலையில் இருந்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு கை கொடுத்து உதவியுள்ளார் மீரா ஜாஸ்மீன்.நியூ, அஆ, கள்வனின் காதலி என அடுத்தடுத்து படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யா இப்பொழுது இயக்குனர்ரத்னகுமாரின் திருமகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.இந்தப் படத்தில் இவருக்கு மூன்று நாயகிகள். இதில் கவர்ச்சி ரோலில் நடிக்க சமிக்ஷாவை ஏற்கானவே ஒப்பந்தம்செய்துவிட்டார்கள்.ஆனால், மற்ற இரண்டு நாயகிகளுக்காக அலைந்து திரிந்தனர். சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள்தயங்குவதால், முன்னணி நடிகைகள் யாரையும் பிடிக்க முடியவில்லை.சூர்யாவுக்கு ரொம்ப நெருக்கமான நிலா கூட உடன் நடிக்க முன் வரவில்லை. இதையடுத்து முன்பு தனக்குநெருக்கமாக இருந்து கள்வளின் காதலி படத்தின்போது தன்னுடன் மோதிய நயன்தாராவிடம் சூர்யாவேவெட்கத்தை விட்டுப் பேசியும் அவர் உடன் நடிக்க மறுத்துவிட்டார்.இதையடுத்து மும்பை பக்கமாய் போய் தோவது புதுமுகத்தைத் தான் தேட வேண்டும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டது திருமகன் யூனிட்.இந் நிலையில் மீரா ஜாஸ்மின் நினைவுக்கு வர அவரிடம் எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கிறார். உடனடியாகஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதோடு கால்ஷீட்டையும் ஒதுக்கிக் கொடுத்து அசத்திவிட்டாராம் மீரா. மூன்றுநடிகைகளில் ஒருவர் என்றாலும் கூட பரவாயில்லை.. நீங்க திறமையான நடிகர். உங்க கூட நடிப்பது சந்தோஷம்என்றாராம் மீரா.இதையடுத்து இன்னொரு ஹீரோயினுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.விஜய்யை வைத்து சூர்யா இயக்குவதாக இருந்த புலி படம் டிராப் ஆனதையடுத்து அடுத்து இப்போதைக்குஅடுத்த படத்தை இயக்கும் திட்டம் ஏதும் சூர்யாவிடம் இல்லையாம். காரணம், திருமகன் படம் தவிர பண்டிகை,வியாபாரி என அடுத்த இரு படங்களிலும் ஹீரோவாக நடிக்க புக் ஆகிவிட்டார் சூர்யா. இதில் பண்டிகைபடத்துக்கு இன்னும் கதையே ரெடியாகவில்லையாம்.ேஒரு படத்துக்கு ரூ. 75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சூர்யா, அதில் கறாராக இருப்பதில்லை. மிகவும் கெஞ்சிக்கேட்டால் சம்பளத்தை தாராளமாகவே குறைத்தும் கொள்கிறார். இவரது படம் ரூ. 6 கோடி வரை வியாபாரம்ஆகிவிடுவதால் சூர்யாவை நோக்கி படையெடுக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவேஉள்ளது.கோவை பிரதர்ஸ் படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இப்போது பட்டாசு என்ற படத்துக்குப் பூஜைபோட்டுள்ளார். இதை முடித்துவிட்டு இவரும் சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளாராம்.சூர்யாவை வைத்து படம் எடுப்பது ஓகே. ஹீரோயினுக்கு என்ன செய்யப் போறீங்க? கொசுறு:இந் நிலையில் சூர்யாவுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். நிலா விஷயத்தில் தம்பிசறுக்கியதால் (அவருக்கு இன்னொரு காதலர் இருப்பது தெரிந்தும்) உடனே ஒரு கால்கட்டை போட்டுவிடவீட்டினர் தயாராகிவிட்டனராம்.

By Staff

மிக இக்கட்டான நிலையில் இருந்த எஸ்.ஜே. சூர்யாவுக்கு கை கொடுத்து உதவியுள்ளார் மீரா ஜாஸ்மீன்.

நியூ, அஆ, கள்வனின் காதலி என அடுத்தடுத்து படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யா இப்பொழுது இயக்குனர்ரத்னகுமாரின் திருமகன் படத்தில் நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்தில் இவருக்கு மூன்று நாயகிகள். இதில் கவர்ச்சி ரோலில் நடிக்க சமிக்ஷாவை ஏற்கானவே ஒப்பந்தம்செய்துவிட்டார்கள்.

ஆனால், மற்ற இரண்டு நாயகிகளுக்காக அலைந்து திரிந்தனர். சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க நடிகைகள்தயங்குவதால், முன்னணி நடிகைகள் யாரையும் பிடிக்க முடியவில்லை.

சூர்யாவுக்கு ரொம்ப நெருக்கமான நிலா கூட உடன் நடிக்க முன் வரவில்லை. இதையடுத்து முன்பு தனக்குநெருக்கமாக இருந்து கள்வளின் காதலி படத்தின்போது தன்னுடன் மோதிய நயன்தாராவிடம் சூர்யாவேவெட்கத்தை விட்டுப் பேசியும் அவர் உடன் நடிக்க மறுத்துவிட்டார்.


இதையடுத்து மும்பை பக்கமாய் போய் தோவது புதுமுகத்தைத் தான் தேட வேண்டும் என்ற நிலைக்குத்தள்ளப்பட்டது திருமகன் யூனிட்.

இந் நிலையில் மீரா ஜாஸ்மின் நினைவுக்கு வர அவரிடம் எஸ்.ஜே.சூர்யா பேசியிருக்கிறார். உடனடியாகஜோடியாக நடிக்க ஒப்புக் கொண்டதோடு கால்ஷீட்டையும் ஒதுக்கிக் கொடுத்து அசத்திவிட்டாராம் மீரா. மூன்றுநடிகைகளில் ஒருவர் என்றாலும் கூட பரவாயில்லை.. நீங்க திறமையான நடிகர். உங்க கூட நடிப்பது சந்தோஷம்என்றாராம் மீரா.

இதையடுத்து இன்னொரு ஹீரோயினுக்கு வலை வீசிக் கொண்டிருக்கிறார்கள்.

விஜய்யை வைத்து சூர்யா இயக்குவதாக இருந்த புலி படம் டிராப் ஆனதையடுத்து அடுத்து இப்போதைக்குஅடுத்த படத்தை இயக்கும் திட்டம் ஏதும் சூர்யாவிடம் இல்லையாம். காரணம், திருமகன் படம் தவிர பண்டிகை,வியாபாரி என அடுத்த இரு படங்களிலும் ஹீரோவாக நடிக்க புக் ஆகிவிட்டார் சூர்யா. இதில் பண்டிகைபடத்துக்கு இன்னும் கதையே ரெடியாகவில்லையாம்.ே


ஒரு படத்துக்கு ரூ. 75 லட்சம் வரை சம்பளம் வாங்கும் சூர்யா, அதில் கறாராக இருப்பதில்லை. மிகவும் கெஞ்சிக்கேட்டால் சம்பளத்தை தாராளமாகவே குறைத்தும் கொள்கிறார். இவரது படம் ரூ. 6 கோடி வரை வியாபாரம்ஆகிவிடுவதால் சூர்யாவை நோக்கி படையெடுக்கும் தயாரிப்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகவேஉள்ளது.

கோவை பிரதர்ஸ் படத்தை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இப்போது பட்டாசு என்ற படத்துக்குப் பூஜைபோட்டுள்ளார். இதை முடித்துவிட்டு இவரும் சூர்யாவை வைத்து ஒரு படம் எடுக்க உள்ளாராம்.

சூர்யாவை வைத்து படம் எடுப்பது ஓகே. ஹீரோயினுக்கு என்ன செய்யப் போறீங்க?


கொசுறு:

இந் நிலையில் சூர்யாவுக்கு வீட்டில் பெண் பார்க்க ஆரம்பித்துவிட்டார்களாம். நிலா விஷயத்தில் தம்பிசறுக்கியதால் (அவருக்கு இன்னொரு காதலர் இருப்பது தெரிந்தும்) உடனே ஒரு கால்கட்டை போட்டுவிடவீட்டினர் தயாராகிவிட்டனராம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X