Don't Miss!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
க்யூப்-க்கு மாற்று.. மிகப்பெரிய பிரச்சனைக்குத் தீர்வு.. வாக்கை காப்பாற்றிய விஷால்..!
க்யூப்க்கு மாற்றாக தயாரிப்பாளர் சங்கம் புதிய யூனிட் ஒன்றைத் திறந்துள்ளது.
சென்னை : க்யூப் பிரச்சினைக்கு மாற்றாக தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோபிளெக்ஸ் நிறுவனமும் இணைந்து புதிய யூனிட் ஒன்றைத் திறந்துள்ளனர்.
நடிகர் விஷால் தலைமையிலான அணி தயாரிப்பாளர் சங்கத்தில் வெற்ற பெற்றதும் பல வாக்குகளை அளித்தனர். அதில் முக்கியமான ஒன்று க்யூப் பிரச்சனை. இதற்காக 2 மாதம் ஸ்டைரைக் கூட அறிவிக்கப்பட்டது.
க்யூப்க்கு மாற்றாக மற்றொரு தொழில்நுட்பத்தை கொண்டுவருவதாக அவர்கள் தெரிவித்திருந்தனர். அதன்படி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கமும், மைக்ரோ ப்ளெக்ஸ் நிறுவனமும் இணைந்து யூனிட் ஒன்றை திறந்துள்ளனர்.
இதன் திறப்புவிழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பெப்சி சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் கதிரேசன், சதீஷ் ஆகியோருடன், நடிகர்கள் பார்த்திபன், மயில்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஆர்.கே.செல்வமணி, 'தயாரிப்பாளர் சங்கம் அளித்த வாக்குறுதியின்படி, க்யூப்புக்கு மாற்றாக, மைக்ரோ பிளெக்ஸ் நிறுவனம் வந்துள்ளது' என்றார்.