Don't Miss!
- News பாஜகவுக்கு பலத்த அடி? 40 வருஷம் பிறகு உ.பி.யின் அம்ரோஹா காங்கிரஸ் வசமாகிறதா?
- Finance அமெரிக்காவுக்கு பதிலடி கொடுத்த சீனா.. வாஸ்ட்அப்-க்கு தடை.. என்ன நடக்குது..?!
- Automobiles அவங்களுக்கு உண்மையாவே கல்யாணமா! பைக் ஓட்டீட்டு போன வீடியோ வைரல்! அதிர்ச்சியில் உறைந்த நெட்டிசன்கள்!
- Sports இனி 14 கோடி சிஎஸ்கே வீரருக்கு டாடா பைபை.. பழைய ஆல் - ரவுண்டர் பக்கம் திரும்பிய பிளெம்மிங்
- Lifestyle நீங்க போடுற டீ அமிர்தம் மாதிரி இருக்கணுமா? அப்ப டீ போடுறப்ப இந்த தவறுகளை தெரியாம கூட பண்ணிராதீங்க...!
- Technology கடையை இழுத்து மூடும் OnePlus.. இனி தமிழ்நாட்டில் ஒன்பிளஸ் போன் வாங்க முடியாதா? உண்மை என்ன?
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
மோடி நம்மை ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார், எதிர்த்து போராட வேண்டும்: மன்சூர் அலிகான்
சென்னை: பிரதமர் மோடி நம்மை எல்லாம் ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார் என நடிகர் மன்சூர் அலி கான் தெரிவித்துள்ளார்.
கறுப்பு பணத்தை ஒழிக்க 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி இரவு 8.20 மணிக்கு அறிவிப்பு வெளியிட்டார்.
இந்நிலையில் இது குறித்து நடிகர் மன்சூர் அலி கான் கொஞ்சம் கொஞ்சம் பட இசை வெளியீட்டு விழாவில் கூறுகையில்,
மோடி
கறுப்பு பணத்தை ஒழிக்கிறேன் என முன்னேற்பாடுகள் எதுவும் செய்யாமல் இரவோடு இரவாக 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என மோடி அறிவித்து பணத்தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டார்.
ராப்பிச்சைக்காரன்
நம் அனைவரையும் மோடி ராப்பிச்சைக்காரன் ஆக்கிவிட்டார். மக்கள் சில்லரை இல்லாமல் வீதி வீதியாக அலைகிறார்கள். சில்லரை வாங்க வங்கிகள், ஏடிஎம் மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நாள் முழுவதும் நிற்கிறார்கள்.
பணம்
செலவுக்கு பணம் இல்லாமல் மக்கள் அல்லாடுகிறார்கள். இதனால் அவர்கள் தியேட்டர்களுக்கு படம் பார்க்க செல்லவில்லை. கடந்த 5 நாட்களாக தியேட்டர்கள் காத்து வாங்குகின்றன.
போராட்டம்
மோடியின் நடவடிக்கையால் சினிமா துறை முடங்கிவிட்டது. இதற்கு திரையுலகினர் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மேலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கலைஞர்கள் சேர்ந்து எதிர்ப்பு குரல் கொடுத்து போராட வேண்டும்.
ரூ.2000
ரூ.2000 நோட்டை மடித்து பாக்கெட்டில் நான்கு முறை வைத்தால் கிழிந்துவிடும். அந்த நிலையில் உள்ளது. நம் கலைஞர்களிடம் கேட்டிருந்தால் கூட இதை விட நல்ல நோட்டை அளித்திருப்பார்கள்.