அருண் வைத்தியநாதன் படத்தில் நடிக்கவில்லை.. விஜய்யுடன் மட்டுமே நடிக்கிறேன் - மோகன் லால்
இப்போதைக்கு விஜய்யுடன் ஒரு தமிழ்ப் படத்திலும், ஒரு மலையாளப் படத்திலும் மட்டுமே நடிக்கிறேன். வேறு எந்தப் படத்திலும் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை. என்னை வைத்து வரும் செய்திகளில் உண்மையும் இல்லை என்று மலையாள நடிகர் மோகன் லால் அறிவித்துள்ளார்.
அச்சமுண்டு அச்சமுண்டு படம் இயக்கிய அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் பெருச்சாழி என்ற மலையாளப் படத்தில் மோகன்லால் நடிப்பதாக செய்திகள் வந்தன.

ஆனால் அதனை மறுக்கும் விதத்தில் மோகன் லால் பேஸ்புக்கில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில், "இப்போதைக்கு விஜய்யுடன் ஒரு தமிழ்ப் படத்திலும், மலையாளத்தில் ஒரு படத்திலும் மட்டுமே நடிக்கிறேன். இவை நான் ஏற்கெனவே ஒப்புக் கொண்டவை. வேறு படங்கள் எதிலும் நான் கமிட் ஆகவில்லை. அதுபற்றி வரும் செய்திகளில் உண்மையில்லை," என்று தெரிவித்துள்ளார்.
தன் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என அருண் தெரிவித்த நிலையில், திடீரென மோகன்லால் மறுப்பு தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











