Don't Miss!
- News விண்ணைத் தொடும் உச்சம்! சென்னையில் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை ரூ51,000-த்தை தாண்டியது!
- Automobiles 20ஆண்டுகள் கழித்து தன்னுடைய அடையாளத்தை மாற்றிய லம்போர்கினி! இந்த லோகோவோட அழகுக்கே நிறையபேரு காரை வாங்க போறாங்க
- Finance அதானி உடன் கைகோர்த்த அம்பானி.. வரலாற்று சம்பவம், இனி என்னவெல்லாம் நடக்குமோ..?
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒருவர் நூறு வயசுவரைக்கும் ஆரோக்கியமா வாழ இந்த விஷயங்களை பாலோ பண்ணுனா போதுமாம்...!
- Sports முட்டாள்தனம்.. என்னையா டீமை விட்டு விரட்டி விட்டீங்க.. ஐபிஎல் அணியை கதற விட்ட ஆவேஷ் கான்
- Technology திடீரென இலவச பிரீமியம் சந்தா அறிவித்த எலான் மஸ்க்.. உற்சாகத்தில் எக்ஸ் பயனர்கள்..
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
அடுத்தது ‘நச்’சுனு அழுத்தமா ஒரு காதல் படம் தான்...: தனுஷ்
மும்பை: தனது மூன்றாவது இந்திப்படம் ஒரு அழுத்தமான காதல் கதையாக இருக்கும் என நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.
தனுஷ் தற்போது வேல்ராஜ் இயக்கத்தில் ‘விஐபி2' படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்திற்குப் பின் அவர் வெற்றிமாறன் இயக்கவிருக்கும் ‘சூதாடி' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த இரண்டு படங்களை முடித்தபிறகு அவர் இந்தியில் மூன்றாவது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப் பட்டது.
ஓகே கண்மணி மூலம் இளைஞர்களை மீண்டும் வசீகரித்த மணிரத்னத்துடன் தனுஷ் சேர்வார் என்றும், இப்படம் இந்தியில் அவரது மூன்றாவது படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், இந்தியில் தனது மூன்றாவது படம் குறித்துப் பேசியுள்ளார் தனுஷ்.
தொடர் வெற்றி...
ஏற்கனவே இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்சனா, ஷமிதாப் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். அந்த இரண்டு படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்ததால், தமிழைப் போலவே இந்தியிலும் தனுஷுக்கு ரசிகர்கள் உள்ளனர்.
ராஞ்சனா இயக்குநர்...
எனவே, இந்தியில் தனது மூன்றாவது படத்தை தேர்வு செய்வதில் நிதானம் காட்டி வந்தார் தனுஷ். இந்நிலையில் தனது மூன்றாவது இந்திப்படத்தையும், முதல் இந்திப் படமான ராஜ்சனாவை இயக்கிய ஆனந்த் எல் ராயே இயக்குகிறார் என தனுஷ் அறிவித்துள்ளார்.
அழுத்தமான காதல் கதை...
இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "நான் நடித்ததிலேயே இந்த படம் தான் மிக அழுத்தமான காதல் கதையாக இருக்கும். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டின் இறுதியில் தொடங்கும்.
மகிழ்ச்சி...
ஒரு நடிகராக என்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ளும் வகையில் நல்ல கதாபாத்திரங்கள் தொடர்ந்து அமைந்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது" என அவர் தெரிவித்துள்ளார்.