Don't Miss!
- Finance 7.50 லட்சம் கோடி ரூபாயை நிதி திரட்டும் மத்திய அரசு.. எதற்காக தெரியுமா..?
- Lifestyle 1000 ஆண்டுகளுக்கு முன் ஒரே இரவில் சர்ஜிக்கல் தாக்குதல் நடத்தி ஒரு நாட்டையே வென்ற தமிழ் அரசர்... யார் தெரியுமா?
- News "மகளிர் உரிமை தொகை வரல.." அமைச்சரை பேச விடாமல் நிறுத்திய பெண்.. மேடையில் அடுத்து நடந்த பரபர சம்பவம்
- Automobiles அடி மாட்டு விலைக்கு எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மாருதி! பெட்டி கடைல வெத்தல, பாக்கு விக்கற மாதிரி விக்க போகுது
- Sports ரோகித்.. ரோகித் என கத்திய ரசிகர்கள்.. ஓங்கி ஒரு அடி விட்ட ஹர்திக் பாண்டியா - வீடியோ
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
ஷூட்டிங் இல்லை... வீட்டில் உட்கார்ந்து ஊறுகாய் செய்ய கற்றுக் கொண்ட ஹீரோ... வைரலாகும் வீடியோ!
ஐதராபாத்: ஊரடங்கு நாளன்று வீட்டில் அம்மாவுடன் சேர்ந்து ஊறுகாய் செய்துள்ள ஹீரோவின் வீடியோ வைரலாகி வருகிறது.
விஜய் இயக்கிய தியா மூலம் தமிழில் அறிமுகமானவர், நாக சவுரியா. இதில் சாய் பல்லவி ஹீரோயினாக நடித்திருந்தார்.
தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள நாக சவுரியா, நர்த்தனசாலா, அஸ்வத்தமா, சலோ ஆகிய படங்களை தயாரித்தும் உள்ளார்.
தமிழகத்தில்
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாகப் பரவி வருவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் முந்நூறுக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
படப்பிடிப்பு ரத்து
இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த மக்கள் அதிகமாகக் கூடும் மால்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவற்றை 31 ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. டி.வி.சீரியல்களின் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், நடிகர், நடிகைகள் வேறு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி
இந்நிலையில், நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் மோடி, மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்வதன் மூலமே கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும், எனவே, வரும் 22 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவை கடை பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்' என்று கூறி இருந்தார். அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து வேறு எதற்காகவும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.
View this post on InstagramAvakai...♥♥ Learning from mom #Avakai #Homemade #JanathaCurfew #daywithfamily
A post shared by Naga Shaurya (@actorshaurya) on
உருப்படியாக
அதன்படி, இந்தியா முழுவதும் நேற்று ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. பொதுமக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 வரை வீட்டுக்குள்ளேயே இருந்தனர். இந்நிலையில் வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பதற்கு பதிலாக உருப்படியாக ஒரு வேலை செய்திருக்கிறார், ஹீரோ நாக சவுரியா. அதாவது அம்மாவுடன் இணைந்து ஊறுகாய் செய்திருக்கிறார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார், நாக சவுரியா.
மாங்காய் ஊறுகாய்
ஊரடங்கு நாளான நேற்று சினிமா நட்சத்திரங்கள், குடும்பத்துடன் நேரத்தை எப்படி செலவிட்டார்கள் என்று வீடியோவாக வெளியிட்டு இருந்தனர். இதில் நாகசவுரியா மாங்காய் ஊறுகாய் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், அம்மாவிடம் இருந்து மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்பதை கற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதற்கு ஏராளமான ரசிகர்கள் கமென்ட் அடித்துள்ளனர்.