Don't Miss!
- News தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள்.. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
- Finance ரூ.10 லட்சத்திற்கு கீழ் கிடைக்கும் செகண்ட்ஹேண்ட் கார் கார்கள்? உங்களின் சாய்ஸ் எது?
- Sports "ரோஹித் எனக்கு கீழ் ஆடுவது".. எல்லை மீறிவிட்டார் ஹர்திக் பாண்டியா.. ரசிகர்கள் கொந்தளிப்பு
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Automobiles கொஞ்ச நேரத்துல உயிர் போய்ட்டு வந்துச்சு!! தப்பிக்க, பைக்கில் இதையெல்லாம் டிரை செய்து பாருங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஆண்கள் கல்யாணத்துக்கு முன்னாடியே இந்த 6 விஷயங்களை அவசியம் தெரிஞ்சு வைச்சுக்கணுமாம்...!
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
விஷால், பிரசன்னாவைத் தொடர்ந்து தொலைக்காட்சிக்கு வரும் நகுல்
சென்னை: விஷாலைத் தொடர்ந்து நடிகர் நகுலும் சின்னத்திரைக்கு வருகிறார்.
தொலைக்காட்சி சேனல்கள் தங்களின் டிஆர்பி ரேட்டிங்கை உயர்த்த பல்வேறு யுக்திகளைக் கையாளுகின்றன. அதில் ஒரு பகுதியாக நடிகர்களை ரியாலிட்டி ஷோக்களுக்கு விருந்தினராகவும், தொகுப்பாளராகவும் நியமிக்கின்றனர்.
விஷால், வரலட்சுமி, கரு பழனியப்பன், ஸ்ருதி ஹாசன், பிரசன்னா போன்றவர்கள் தொகுப்பாளர் அவதாரம் எடுத்திருக்கும் நிலையில், இப்போது நடிகர் நகுல் ஒரு நடன நிகழ்ச்சிக்கு ஜட்ஜாக வரவுள்ளார்.
நகுலின் நடனத்திறனுக்கு நாக்க முக்க... பாடலுக்குஅவர் போட்ட குத்தாட்டமே மிகச்சிறந்த உதாரணம். பிரபல தனியார் தொலைக்காட்சியில் டான்ஸ் vs டான்ஸ் என்ற நடன நிகழ்ச்சி ஆரம்பமாக உள்ளது. அதற்கு ஜட்ஜாக நகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
மல்யுத்த வீராங்கனையிடம் சவால்விட்டு அடி வாங்கி மயங்கிய ஓட்டை வாய் நடிகை
இந்த நிகழ்ச்சி பற்றி பேசிய நகுல், ஏற்கனவே சில தொலைக்காட்சி வாய்ப்புகள் வந்ததாகவும், ஆனால் இந்த நிகழ்ச்சியில் ஃபார்மட் பிடித்திருந்ததால் இதற்கு சம்மதித்ததாகவும் கூறினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் நடன இயக்குனர் பிருந்தாவுடன் சேர்ந்து இருப்பது மகிழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டார்.
நகுல் தற்போது சுனைனாவுடன் சேர்ந்து எரியும் கண்ணாடி திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அப்படத்திற்கான முதற்கட்ட வேலைகள் ஆரம்பமாகியுள்ளன. காதலில் விழுந்தேன், மாசிலாமணி படங்களுக்குப் பிறகு இருவரும் இப்படத்தில் இணைகின்றனர்.