Don't Miss!
- News நாங்க ஆகம விதி நிபுணர்கள் அல்ல.. பிடிஆர் தாயிடம் செங்கோல் தர எதிர்க்கும் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி
- Finance பெங்களூர் தண்ணீர் பஞ்சத்தில் இப்படியொரு பிரச்சனையா..? அதிர்ச்சியான விஷயம் தான்..!
- Automobiles ரூ.10,000க்கு இவ்ளோ சூப்பரான கேமராவா! இது பொருத்தினா திருட்டு, தேவையில்லா சிக்கல் எதுலையும் சிக்க மாட்டீங்க!
- Sports மும்பை இந்தியன்சின் ஏமாற்று வேலைக்கு இனி ஆப்பு.. புதிய நடைமுறையை கொண்டு வந்த ஐபிஎல் நிர்வாகம்
- Technology புது கலர்.. அதே டிசைன்.. வாய்பிளக்க வைக்கும் விலை.. Nothing Ear மற்றும் Ear A அறிமுகம்.. ஏப்.22 முதல் விற்பனை!
- Lifestyle 1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
தோள் பட்டையில் வலி... பிரபல நடிகருக்கு 4 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை.. சோகத்தில் ரசிகர்கள்!
ஹைத்ராபாத்: தோள்பட்டையில் ஏற்பட்ட வலியை தொடர்ந்து பிரபல நடிகருக்கு 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் நண்டமுரி பாலகிருஷ்ணா. 61 வயதான நண்டமுரி பாலகிருஷ்ணா தெலுங்கு சினிமாவில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக கோலொச்சி வருகிறார்.
நோட்டீஸ் அனுப்புவேன்... ஹுமா குரேஷியை மிரட்டிய சோனாக்ஷி சின்ஹா...ஏன் என்னாச்சு ?
தெலுங்கில் இதுவரை 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நந்தி விருது, சைமா விருது, சந்தோஷம் விருது என ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார்.
கால் தூசுக்கு சமம்
சமீபத்தில் தெலுங்கு டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா, ஆஸ்கர் விருது வென்ற ஏஆர் ரஹ்மான் யார் என்றே தனக்கு தெரியாது என்று கூறி சர்ச்சையை கிளப்பினார். மேலும் இந்த விருதெல்லாம் என் கால் தூசுக்கு சமம் என்றும் கூறி பரபரப்பை கிளப்பினார்.
'அகண்டா' படம்
இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விமர்சனத்துக்கு ஆளான நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார். தற்போதும் சினிமாவில் பிஸியாக உள்ள நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா, போயபதி சீனு இயக்கத்தில் உருவாகி வரும் 'அகண்டா' படத்தில் நடித்து வருகிறார்.
மருத்துவமனையில் அனுமதி
இதனை தொடர்ந்து கோபிசந்த் மாலினேனி இயக்கவுள்ள ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார் நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா. இந்நிலையில் நடிகர் நண்டமுரி பாலகிருஷ்ணா ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நேற்று முன் தினம் அனுமதிக்கப்பட்டார்.
அறுவை சிகிச்சை
கடந்த ஆறு மாதகாலமாக பாலகிருஷ்ணாவுக்கு தோள்பட்டையில் வலி இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சமீப நாட்களாக வலி அதிகரித்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டு தோள்பட்டையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
4 மணிநேரம் அறுவை சிகிச்சை
இடது தோள்பட்டையில் சுமார் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு பாலகிருஷ்ணா நலமுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாலகிருஷ்ணாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட தகவலை அறிந்த ரசிகர்கள் அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.