Don't Miss!
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
மணிரத்னம் படத்தில் துல்கருக்கு பதில் நானி
மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் துல்கர் சல்மானுக்கு பதில் நான் ஈ நானி நடிக்கிறார்.
ஓ காதல் கண்மணிக்குப் பிறகு மணி ரத்னம் இயக்கும் படத்தில் கார்த்தி, துல்கர் சல்மான், கீர்த்தி சுரேஷ், நித்யா மேனன் போன்றோர் நடிப்பதாக முதலில் சொல்லப்பட்டது.
ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
படப்பிடிப்பு டிசம்பர் முதல் ஆரம்பமாகும் என்றும் தகவல்கள் வந்தன.
ஆனால் துல்கர் 2 மலையாளப் படங்களில் பிஸியாக இருப்பதால் அவரால் உடனடியாக மணிரத்னம் படத்துக்கு வர முடியவில்லை.
கிட்டத்தட்ட இரு மாதங்கள் காத்திருந்த மணிரத்னம், இப்போது துல்கருக்கு பதிலாக வேறு நடிகரை நடிக்க வைக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் மணி.
இந்த நிலையில் கடந்த வாரம் தெலுங்கு நடிகர் நானி மணிரத்னத்தைச் சந்தித்தார். புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க மணிரத்னம் கேட்ட கால்ஷீட்டை மொத்தமாகக் கொடுத்துவிட்டாராம்.
இந்தப் படம் தமிழ், தெலுங்கில் இருமொழிப் படமாக உருவாகிறது.