Don't Miss!
- News தமிழகத்தையே அதிர வைத்த பேராசிரியர் நிர்மலா தேவி வழக்கு! 7 ஆண்டுகள் கழித்து நாளை தீர்ப்பு!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Finance ஷாக் கொடுத்த டெக் மஹிந்திரா.. லாபத்தில் 40 சதவீதம் சரிவு.. மோஹித் ஜோஷி-க்கு சவால்..!!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
கருணாநிதி படத்திலிருந்து நெப்ஸுக்கு கல்தா! திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனம், பாடலில் உருவாகும் பாசக்கிளிகள் படத்தில் முதலில் புக் செய்யப்பட்டநெப்போலியனை இப்போது அந்தப் படத்திலிருந்து தூக்கி விட்டார்களாம்.சின்ன பட்ஜெட்டில் மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுப்பவர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் ராமநாராயணன். ஒரே மாதத்தில் கூட இவர் படத்தை எடுத்து முடித்து விடுவார். ஆனால் படத்தை ரொம்ப நாள் தியேட்டரில் ஓடவைப்பார்.படம் எடுத்து நஷ்டப்பட்டதாக சரித்திரமே இல்லை என்று கூறும் அளவுக்கு படு நிம்மதியாக இருந்து வரும் ராம நாராயணன்,சமீபத்தில் கருணாநிதி கதை, வசனத்தில் சத்யராஜ், சிபிராஜை வைத்து மண்ணின் மைந்தன் என்ற சின்ன பட்ஜெட் படத்தைஎடுத்து ஓரளவு லாபம் பார்த்தார்.இப்போது மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறார் ராம நாராயணன். பாசக்கிளிகள் என்று இப்படத்திற்குப் பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதிலும் கருணாநிதி தான் கதை, வசனம். கூடுதலாக ரெண்டு பாட்டையும் இதில் எழுதுகிறாராம் கலைஞர்.இப்படத்தில் பிரபு, முரளி நடிக்கவுள்ளனர். ஆனால் முதலில் முரளிக்குப் பதில் நெப்போலியனைத் தான் முடிவுசெய்திருந்தார்கள். ஆனால் திடீரென நெப்போலியனைத் தூக்கி விட்டு முரளியைப் போட்டு விட்டார்கள். இதனால் "நெப்ஸ்பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.ராம நாராயணனும் திமுகவைச் சேர்ந்தவர், கருணாநிதியின் கதை வசனம் வேறு என்று சந்தோஷமாக இருந்த நெப்போலியன்,தான் நீக்கப்பட்டதால் வெறுத்துப் போய் விட்டாராம். அவரிடம் முதலில் கிராமத்துக் கதை என்று தான் ராம நாராயணன்கூறியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் கதையை மாற்றி விட்டாராம்.இது நெப்போலியனுக்கு உடன்பாடாக இல்லை. கதையை மாற்ற வேண்டாம் என்று ராமநாராயணனிடம் கூறியுள்ளார். ஆனால்அதை ஏற்காத ராம நாராயணன் ஹீரோவையே மாற்றி விட்டார்.அடங்கொக்க மக்கா!
திமுக தலைவர் கருணாநிதியின் கதை, வசனம், பாடலில் உருவாகும் பாசக்கிளிகள் படத்தில் முதலில் புக் செய்யப்பட்டநெப்போலியனை இப்போது அந்தப் படத்திலிருந்து தூக்கி விட்டார்களாம்.
சின்ன பட்ஜெட்டில் மிகப் பெரிய வெற்றிப் படங்களைக் கொடுப்பவர் என்ற பெருமையைப் பெற்றவர் இயக்குனர் ராமநாராயணன். ஒரே மாதத்தில் கூட இவர் படத்தை எடுத்து முடித்து விடுவார். ஆனால் படத்தை ரொம்ப நாள் தியேட்டரில் ஓடவைப்பார்.
படம் எடுத்து நஷ்டப்பட்டதாக சரித்திரமே இல்லை என்று கூறும் அளவுக்கு படு நிம்மதியாக இருந்து வரும் ராம நாராயணன்,சமீபத்தில் கருணாநிதி கதை, வசனத்தில் சத்யராஜ், சிபிராஜை வைத்து மண்ணின் மைந்தன் என்ற சின்ன பட்ஜெட் படத்தைஎடுத்து ஓரளவு லாபம் பார்த்தார்.
இப்போது மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கப் போகிறார் ராம நாராயணன். பாசக்கிளிகள் என்று இப்படத்திற்குப் பெயர்வைக்கப்பட்டுள்ளது. இதிலும் கருணாநிதி தான் கதை, வசனம். கூடுதலாக ரெண்டு பாட்டையும் இதில் எழுதுகிறாராம் கலைஞர்.
இப்படத்தில் பிரபு, முரளி நடிக்கவுள்ளனர். ஆனால் முதலில் முரளிக்குப் பதில் நெப்போலியனைத் தான் முடிவுசெய்திருந்தார்கள். ஆனால் திடீரென நெப்போலியனைத் தூக்கி விட்டு முரளியைப் போட்டு விட்டார்கள். இதனால் "நெப்ஸ்பயங்கர கடுப்பில் இருக்கிறாராம்.
ராம நாராயணனும் திமுகவைச் சேர்ந்தவர், கருணாநிதியின் கதை வசனம் வேறு என்று சந்தோஷமாக இருந்த நெப்போலியன்,தான் நீக்கப்பட்டதால் வெறுத்துப் போய் விட்டாராம். அவரிடம் முதலில் கிராமத்துக் கதை என்று தான் ராம நாராயணன்கூறியுள்ளார். ஆனால் கடைசி நேரத்தில் கதையை மாற்றி விட்டாராம்.
இது நெப்போலியனுக்கு உடன்பாடாக இல்லை. கதையை மாற்ற வேண்டாம் என்று ராமநாராயணனிடம் கூறியுள்ளார். ஆனால்அதை ஏற்காத ராம நாராயணன் ஹீரோவையே மாற்றி விட்டார்.
அடங்கொக்க மக்கா!