ஹீரோ .. ஹீரோ ..
எப்போது பார்த்தாலும் தொடை தெரிய ஏறக் கட்டிய வேட்டியும், முண்டா பனியனும், முறுக்கிய மீசையும்,கையில் வெட்டரிவாளோ அல்லது பட்டாக் கத்தியோ பளபளக்க பயமுறுத்தும் நெப்போலியன் இவை எதுவுமேஇல்லாமல் படு வித்தியாசமான கேரக்டரில் நடித்துள்ளார்.
படத்தின் பெயர் "மேக சந்தேஸம்". ரொம்ப குழப்பமா இருக்கா? இந்தப் படம் தமிழில் வரவில்லை. மலையாளத்தில்வந்தது. இந்தப் படத்தில் முகத்தில் சாந்தம் தவழும் பாதிரியார் வேடத்தில் வருகிறார் நெப்போலியன். சுரேஷ்கோபிகதாநாயகனாகவும், சம்யுக்தா வர்மா ஹீரோயினாகவும் நடித்துள்ள இப்படம் ஆவிகள் சம்பந்தப்பட்டது.
காதலித்த காதலனைக் கைப்பிடிக்கும் முன் இறந்த ஒரு பெண், ஆவியாக வந்து காதலனை அடைய எடுக்கும்முயற்சிகளை படமாக்கியுள்ளனர்.
வித்தியாசமான கதையைக் கொண்ட இந்தப் படம் "ரோஸி" என்ற பெயரில் தமிழுக்கு வருகிறது. அமைதியானநெப்போலியனை முதல் முறையாக இந்தப் படத்தில் பார்க்கப் போகிறோம் என்ற நினைப்பே பரவசமாகஇருக்கிறதல்லவா?


Click it and Unblock the Notifications











