Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
போறோம், மல்லுக்கட்டுறோம், கைதாகிறோம்: இது தான் விஷால் ஸ்க்ரிப்டா?
Recommended Video
சென்னை: விஷால் வீட்டிலேயே பிளான் பண்ணிவிட்டு வந்து கைதாகியுள்ளதாக சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷாலை கண்டித்து தயாரிப்பாளர்கள் சிலர் சென்னை தி. நகர், அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடங்களுக்கு பூட்டு போட்டனர்.
தி. நகர் அலுவலகத்திற்கு இன்று வந்த விஷால் பூட்டை உடைக்க முயன்று கைது செய்யப்பட்டார். அதன் பிறகு பூட்டு திறக்கப்பட்டது.
விஷால்
விஷால் கைதானது குறித்து தான் சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. விஷால் திட்டம் போட்டு வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதானதாக பேச்சு கிளம்பியுள்ளது.
போலீஸ்
ஆர்.கே. நகரில் தேர்தலின்போது வேட்புமனு நிராகரிக்கப்பட்டபோதும் விஷால் நடுத்தெருவில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அலுவலகத்திற்குள் நடந்தவற்றை வீடியோ எடுத்து அவரே மீடியாக்களுக்கு அனுப்பி வைத்தார். தற்போதும் கைதாவோம் என்று தெரிந்தே போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விஷால் ஒரு டிராமா கிங் என்கிறார்கள் நெட்டிசன்கள்.
|
கலாய்
விஷால் கைதானது குறித்து மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள்.
|
தமிழ் ராக்கர்ஸ்
படம் என்று நினைத்துக் கொண்டு விஷாலை ரிலீஸ் செய்ய தமிழ் ராக்கர்ஸ் வந்துவிடப் போகிறது.
|
விளம்பரம்
அரசியலுக்கு வரத் துடிக்கும் விஷால் விளம்பரம் தேடுகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது என்னடா, புரட்சி தளபதிக்கு வந்த சோதனை?