Don't Miss!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இரு அணியும் கொண்டாடத் தேவையில்லை, தீர்ப்பு என்ன சொல்கிறது தெரியும்ல?: அரவிந்த்சாமி
சென்னை: எம்.எல்.ஏ.க்களை அவர்களின் இடங்களுக்கு சென்று பணியை துவங்கச் சொல்லுங்கள் என நடிகர் அரவிந்த்சாமி தெரிவித்துள்ளார்.
19 ஆண்டுகளாக நடந்து வந்த சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளித்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணமடைந்ததால் வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று அறிவித்த நீதிமன்றம் அவர்களுக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அந்த 3 பேரும் பெங்களூரில் வழக்கு நடந்த நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும். பின்னர் அவர்கள் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்படுவார்கள்.
கனவு
தமிழக முதல்வராகத் துடித்த சசிகலாவின் கனவு தவிடிபொடியாகியுள்ளது. அதிமுக எம்.எல்.ஏ.க்களை கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைத்ததும் வீணாகிவிட்டது.
அரவிந்த் சாமி
சசிகலா முதல்வராகத் துடித்தது, முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சசிகலாவை எதிர்த்தது குறித்து நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில் அவர் தீர்ப்பு குறித்தும் ட்வீட்டியுள்ளார்.
|
கொண்டாட்டம்
இரண்டு பக்கத்தினரும் கொண்டாடத் தேவையில்லை. விசாரணை நீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் அது என்ன கூறுகிறது என்பதை நினைத்துப் பார்க்கவும் என தெரிவித்துள்ளார் அரவிந்த்சாமி.
|
எம்.எல்.ஏ.க்கள்
தற்போது அவரவர் இடங்களுக்கு திரும்பிச் சென்று வேலையை துவங்குமாறு எம்.எல்.ஏ.க்களை கேட்டுக் கொள்ளவும் என்று கூறியுள்ளார் அரவிந்த்சாமி.