Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எங்க வீட்டு பெண்களிடம் வாலாட்ட யாருக்கும் தில் இல்லை: நடிகர் பெருமிதம்
மும்பை: எங்கள் வீட்டு பெண்களிடம் தவறாக நடந்து கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை என்று பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் மீ டூ என்ற குரல் கேட்கிறது. இந்நிலையில் மீ டூ குறித்து பாலிவுட் நடிகர் சயிஃப் அலி கான் பேசியுள்ளார். சயிஃபின் அம்மா சர்மிளா தாகூர், தங்கை சோஹா அலி கான், மனைவி கரீனா கபூர், மகள் சாரா அலி கான் என்று 4 பெண்கள் சினிமா துறையில் உள்ளனர்.
இந்நிலையில் இது குறித்து சயிஃப் கூறியதாவது,
மனைவி
என் வீட்டு பெண்களிடம் யாரும் தவறாக நடந்து கொள்ள மாட்டார்கள். என் அம்மா, மனைவி அல்லது தங்கை என யாரிடமும் தவறாக நடந்து கொள்ளும் தைரியம் யாருக்கும் இல்லை என்றே நினைக்கிறேன். எனக்கு ஏன் இப்படி தோன்றுகிறது என்று தெரியவில்லை. அவர்களை சுற்றி பாதுகாப்பு உள்ளது.
மீ டூ
பாதுகாப்பு இல்லாத பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். நாம் அனைவருக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும். சம்பவம் நடந்த உடனே பெண்கள் தைரியமாக புகார் தெரிவிக்கும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. இது நல்லது. இந்த மீ டூ இயக்கம் தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறேன். இந்த இயக்கம் விரைவில் காணாமல் போய்விடாமல் இருக்க வேண்டும்.
தைமூர்
என் 2 வயது மகன் தைமூர் மீது மக்களுக்கு அப்படி என்ன ஆர்வம் என்று தெரியவில்லை. அவன் எங்கு சென்றாலும் மீடியா ஆட்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். அதனால் எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மீடியாவின் கவனம் இல்லாமல் இருந்தால் நல்லது என்று நினைக்கிறேன். மீடியாவுக்கு பிடித்தால் மக்களுக்கும் பிடிக்கும். ஆனால் நான் அடுத்தவர்களின் குழந்தைகள் மீது ஆர்வம் காட்ட மாட்டேன்.
சமூக வலைதளம்
என் மகனின் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து மக்கள் மகிழ்ச்சி அடைவது நல்லது. ஆனால் ஒரு குழந்தையின் மீது இவ்வளவு ஆர்வம் தேவையா?. அது தான் எனக்கு புரியவில்லை. எனக்கு சமூக வலைதளம் பிடிக்காது. எனக்கு நிஜ உலகம் தான் பிடிக்கும் என்று சயிஃப் அலி கான்தெரிவித்துள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!