Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்! - நடிகர் பிரபு
கோவை: தமிழக - கர்நாடக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில விஷமிகள்தான் இந்த விஷயத்தை பிரச்சினையாக்குகிறார்கள் என்றார் நடிகர் பிரபு.
கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் பேசுகையில், "காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. அதன் வழியில் நடிகர் சங்கம் செல்லும்.
தமிழக, கர்நாடக மக்களிடையே எந்த மோதலும் இல்லை. கர்நாடக மக்கள் காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு காட்டவில்லை. தமிழக விவசாயிகளின் கஷ்டம் கன்னட விவசாயிகளுக்குப் புரியும்.
ஆனால் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில அமைப்புகள் இதை அரசியலாக்குகின்றன.
காவிரி விவகாரத்தை அரசியலாக்க கூடாது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்பட வேண்டும்," என்றார்.