Don't Miss!
- Finance கோடக் மஹிந்திரா பங்குகள் 10 சதவீதம் சரிவு.. முதலீட்டாளர்கள் பெரும் சோகம்.. டார்கெட் விலை குறைந்தது!!
- News மெடிக்கல் ஷாப் போறீங்களா? இருமல் மருந்து வாங்கணுமா? இந்த 67 மருந்துகளுக்கு தடை.. மத்திய அரசு அதிரடி
- Lifestyle இந்த 4 ராசி பெண்கள் காதலில் ரொம்ப அதிர்ஷ்டசாலிகளாம்... இவங்க காதல் வாழ்க்கை நினைச்சதை விட சூப்பரா இருக்குமாம்!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Sports தோனி கிடையாது! இந்த 28 வயது வீரர் தான் மிகவும் அபாயகரமான வீரர்.. மேத்தீவ் ஹைடன் கருத்து
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தமிழக - கர்நாடக மக்களிடம் பிரச்சினை இல்லை... விஷமிகள்தான் காரணம்! - நடிகர் பிரபு
கோவை: தமிழக - கர்நாடக மக்கள் மத்தியில் காவிரி விவகாரத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆனால் சில விஷமிகள்தான் இந்த விஷயத்தை பிரச்சினையாக்குகிறார்கள் என்றார் நடிகர் பிரபு.
கோவையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்த நடிகர் பிரபு நிருபர்களிடம் பேசுகையில், "காவிரிநீர் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.
இந்த விஷயத்தில் தமிழக அரசு சரியாக செயல்படுகிறது. அதன் வழியில் நடிகர் சங்கம் செல்லும்.
தமிழக, கர்நாடக மக்களிடையே எந்த மோதலும் இல்லை. கர்நாடக மக்கள் காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு காட்டவில்லை. தமிழக விவசாயிகளின் கஷ்டம் கன்னட விவசாயிகளுக்குப் புரியும்.
ஆனால் இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு சில விஷமிகள்தான் தாக்குதலில் ஈடுபடுகின்றனர். ஒரு சில அமைப்புகள் இதை அரசியலாக்குகின்றன.
காவிரி விவகாரத்தை அரசியலாக்க கூடாது. காவிரி விவகாரத்தில் இரு மாநிலங்களும் சுமுகமாக செயல்பட வேண்டும்," என்றார்.