சாதாரண நிலைக்குத் திரும்பினார் ரஜினி! - மருத்துவமனை அறிவிப்பு

திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு, கடந்த 13-ந்தேதி போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ரஜினி.
முழுமையான பரிசோதனைக்குப் பின் அவரை தீவிர சிகிச்சை பிரிவுவில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். சுவாசப் பிரச்சினை, சிறுநீரகப் பிரச்சினை போன்றவற்றுக்கு ஒருங்கிணைந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதன் விளைவாக, ரஜினி சாதாரண நிலைக்கு திரும்பிவிட்டார் என்று ராமச்சந்திரா மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
வழக்கமான உணவு உண்டு குடும்பத்தாரோடு ரஜினி மகிழ்ச்சியாக இருப்பதாக, இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளனர். இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











