வீரர்களை ராணுவத்தில் நாமா சேரச் சொன்னோம்?: சீனியர் நடிகர் திமிர் பேச்சு
மும்பை: வீரர்களை நாம் ஒன்றும் கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேரச் சொல்லவில்லையே என பாலிவுட் நடிகர் ஓம் புரி தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பிறகு மும்பையில் தங்கி பாலிவுட் படங்களில் நடித்து வரும் பாகிஸ்தானை சேர்ந்த நடிகர், நடிகைகளுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதில் சில பாலிவுட் நடிகர்கள் பாகிஸ்தான் கலைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் கலைஞர்கள் தீவிரவாதிகள் அல்ல என சல்மான் கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் ஓம் புரியின் பேச்சு மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
அந்த நிகழ்ச்சியில் அவர் கூறியிருப்பதாவது,
அவர்களை நாம் ஒன்றும் ராணுவத்தில் சேருமாறு கட்டாயப்படுத்தவில்லை. 15 முதல் 20 பேரை தற்கொலைப்படை ஆட்களாக பயிற்சி அளித்து பாகிஸ்தானுக்கு அனுப்புங்கள் என்றார்.
இந்த நிகழ்ச்சியை பார்த்த மக்கள் ஓம் புரியை சமூக வலைதளங்களில் திட்டி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











