Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல!- சல்மான்கான்
பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து, மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் தலைமையில் செயல்படும் 'மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா' கட்சியின் கலை இலக்கிய பிரிவு, பாகிஸ்தானிய நடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
மேலும் படப்பிடிப்பிற்காக மும்பையில் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானிய நடிகர்கள் வெளியேற வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்தது. அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் நடிகர்கள் நடித்து வெளியாகும் பாலிவுட் படங்களைத் தடுத்து நிறுத்திடுவோம் என்றும் கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் விதத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் கூறுகையில், "தீவிரவாதிகளுக்கு எதிராக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும். ஆனால் பாகிஸ்தான் நடிகர்கள் என்பவர்கள் தீவிரவாதிகள் அல்லர். இந்திய அரசாங்கம்தான் அவர்களுக்கு விசாவும், அனுமதியும் வழங்குகிறது," என்றார்.