Don't Miss!
- Lifestyle வறுமை நீங்க... செல்வம் பெருக.. துளசியை இந்த திசையில் வையுங்கள்..!
- Sports IPL 2024: ஐபிஎல் வரலாற்றிலேயே மிக மோசமான பவுலிங்.. ரிஷப் பண்ட் வைத்த ஆப்பு.. கதிகலங்கிய மோஹித்
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- News உடல் பருமன் அறுவை சிகிச்சையால் இறந்த மகன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பசங்க 2 படத்திற்கு பேனர், கட் அவுட் வேண்டாம்... இது சூர்யாவின் வேண்டுகோள்
சென்னை: தனது நடிப்பில் வெளியாகவிருக்கும் பசங்க 2 படத்திற்கு பேனர், கட் அவுட் போன்றவை வேண்டாம். அதற்குப் பதிலாக மக்களுக்கு உதவி செய்யுங்கள் என்று நடிகர் சூர்யா ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
சூர்யா நடிப்பில் வருகின்ற 24 ம் தேதி பசங்க 2 திரைப்படம் வெளியாகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிந்து மாதவி, அமலாபால் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.
வழக்கமாக தங்களது அபிமான நடிகர்கள் நடிக்கின்ற படத்திற்கு ரசிகர்கள் கட் அவுட், பேனர் ஆகியவற்றை வைப்பார்கள். ஆனால் நடிகர் சூர்யா தனது படத்திற்கு இவை எதுவும் தேவையில்லை என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும்போது "சென்னை மற்றும் கடலூரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களில் பலர் நேரிடையாக களத்தில் நின்றும் வெளியில் இருந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறீர்கள். உங்களின் மனித நேயப் பணி சிறக்க என் வாழ்த்துக்கள்.
அன்பின் வெளிப்பாடாக எனக்காக நீங்கள் பேனர்கள் வைப்பதையோ, போஸ்டர்கள் ஒட்டுவதையோ என்றைக்கும் நான் விரும்பியதில்லை. இதை நான் உங்களிடம் பலமுறை நேரிடையாகவே சொல்லியிருக்கிறேன்.
வரும் டிசம்பர் 24ம் தேதி வெளியாக உள்ள 'பசங்க 2' திரைப்படத்திற்கு தியேட்டர்களை அலங்கரிக்கும் வேலையைச் செய்யாமல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.
நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட தலைமை மன்ற அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள். வீண் செலவுகளைத் தவிர்த்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபடுங்கள்". என்று நடிகர் சூர்யா தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
#AgaramSOS update: Medical Camp to be conducted on 20th Dec in villages adopted by Agaram at Tiruvallur for 600 ppl in Assn with Apollo Hosp
— Suriya Sivakumar (@Suriya_offl) December 16, 2015
மேலும் இது தவிர வருகின்ற 20 ம்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் தான் தத்தெடுத்து இருக்கும் கிராமங்களில் உள்ள 600 பேருக்கு அப்போலோ மருத்துவமனையுடன் இணைந்து மருத்துவ முகாம் ஒன்றை சூர்யா நடத்தவிருக்கிறார்.