Don't Miss!
- Sports 11 வீரர்களுமே பேட்ஸ்மேனாக வையுங்கள்.. பவுலர்கள் தேவையில்ல.. ஆர்சிபிக்கு ஸ்ரீகாந்த் வினோத கோரிக்கை
- Finance உங்களுக்கு மெட்ராஸ் பேங்க் தெரியுமா.. இந்தியாவுக்கே பாடம் சொல்லிக்கொடுத்த தமிழர்கள்..!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
- News ஐசியூவில் நடிகர் மன்சூர் அலிகான்.. சென்னை மருத்துவமனையில் சிகிச்சை.. உடல்நல கோளாறுக்கு என்ன காரணம்?
- Automobiles சினிமா ஹீரோயின் மாதிரி இருக்காங்க... புதுசா வாங்கன கார்ல வந்து இறங்கனது அவங்களா... மனசை பறிகொடுத்த இளசுகள்!
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Technology பட்ஜெட்ல பெஸ்ட்.. யோசிக்காம வாங்கலாம்.. 43" இன்ச் மற்றும் 55" இன்ச் Smart TV.. லேட் பண்ணிடாதீங்க..
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
ரித்திக் ரோஷன் மீது சென்னை போலீசார் மோசடி வழக்கு!
ரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரித்திக் ரோஷன். இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
சன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரித்திக் ரோஷன் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என புகாரளித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதுவராக இருந்த HRX பிராண்டின் எக்ஸ்ட்ரீம் கேர் பர்ஃப்யூம் மற்றும் அழகுசாதன பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த நிறுவனம் ரித்திக் ரோஷனின் சொந்த நிறுவனம் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
ஆனால், பிறகு வேறு ஒருவருக்கு கைமாறிவிட்டது. அதன் பிறகு சென்னையில் விற்பனையாகாத அந்த நிறுவனத்தின் பொருட்களை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அதற்கு தரவேண்டிய ரூ.20 லட்சத்தை அவர்கள் திருப்பித் தரவில்லை என ரித்திக் ரோஷன் மற்றும் அதில் தொடர்புடைய 7 பேர் மீது புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாபக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு, ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதராக மட்டுமே செயல்படுவதாகவும், முரளிதரனின் இழப்புக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் ரித்திக் தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது. இப்போது கொடுங்கையூர் போலிசார் 420 பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.