Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
ரித்திக் ரோஷன் மீது சென்னை போலீசார் மோசடி வழக்கு!
ரித்திக் ரோஷன் மீது மோசடி வழக்கு பதிந்துள்ளனர்.
சென்னை: பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷன் மீது சென்னை கொடுங்கையூர் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பாலிவுட்டின் முன்னணி கதாநாயகனாக வலம் வருபவர் ரித்திக் ரோஷன். இவர் சினிமாவில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
சன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை நடத்திவரும் சென்னையைச் சேர்ந்த முரளிதரன் என்பவர் ரித்திக் ரோஷன் ரூ. 20 லட்சம் நஷ்ட ஈடு தர வேண்டும் என புகாரளித்துள்ளார்.
ஹ்ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதுவராக இருந்த HRX பிராண்டின் எக்ஸ்ட்ரீம் கேர் பர்ஃப்யூம் மற்றும் அழகுசாதன பொருட்களை வாங்கி விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்து கொண்டேன். அந்த நிறுவனம் ரித்திக் ரோஷனின் சொந்த நிறுவனம் என ஆரம்பத்தில் சொல்லப்பட்டது.
ஆனால், பிறகு வேறு ஒருவருக்கு கைமாறிவிட்டது. அதன் பிறகு சென்னையில் விற்பனையாகாத அந்த நிறுவனத்தின் பொருட்களை நான் திருப்பி அனுப்பிவிட்டேன். அதற்கு தரவேண்டிய ரூ.20 லட்சத்தை அவர்கள் திருப்பித் தரவில்லை என ரித்திக் ரோஷன் மற்றும் அதில் தொடர்புடைய 7 பேர் மீது புகாரளித்துள்ளார்.
இதுதொடர்பாபக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு, ரித்திக் ரோஷன் விளம்பரத் தூதராக மட்டுமே செயல்படுவதாகவும், முரளிதரனின் இழப்புக்கு பொறுப்பேற்க முடியாது எனவும் ரித்திக் தரப்பிலிருந்து பதில் வந்துள்ளது. இப்போது கொடுங்கையூர் போலிசார் 420 பிரிவில் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.