Don't Miss!
- News எத்தனை பேர் வந்தாலும்.. கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கர் "மட்டும்" ஏன் ஸ்பெஷல்?
- Lifestyle கோடையில் இரவு தூங்கும் முன் இதை முகத்தில் தடவுங்கள்.. உங்கள் சருமம் அழகாகவும் பளப்பளப்பாகவும் இருக்கும்..!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
இனி நேரடி அரசியல்... 2014- தேர்தலில் போட்டி! - நடிகர் பாலகிருஷ்ணா
30 ஆண்டுகளுக்கும் மேலாக தெலுங்கு சினிமாவில் நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. அவர், தன் தந்தை தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சியில் இப்போது உள்ளார். தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகனுக்கு தன் மகளை திருமணம் செய்து கொடுத்துள்ளார்.
இந்நிலையில், பாலகிருஷ்ணா, நேரடி அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார். கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனது சொந்த ஊரான கண்டசாலாவுக்கு அவர் சென்றார். அங்கு என்.டி.ராமாராவ் சிலையை திறந்து வைத்தபோது, தனது அரசியல் முடிவை அறிவித்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "என் தந்தையின் லட்சியப்படி, ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களுக்கு பாடுபடுவதற்காகவே, நான் நேரடி அரசியலில் ஈடுபட முடிவு செய்துள்ளேன். தற்போதைய காங்கிரஸ் அரசு, ஏழைகள் நலனுக்காக சிறப்பான திட்டங்களை அமல்படுத்த தவறிவிட்டது.
2014-ம் ஆண்டு நடைபெறும் ஆந்திர சட்டசபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் நான் போட்டியிடுவேன். எந்த தொகுதியில் நிற்பது என்று கட்சி மேலிடம் முடிவு செய்யும். அதற்கு நான் கட்டுப்படுவேன்," என்றார்.