Don't Miss!
- Lifestyle Mango Benefits: ஆண்கள் தினமும் ஒரு மாம்பழம் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்-ன்னு தெரியுமா?
- News தேவ கவுடா காலத்தில் தொடங்கிய சினிமாவை மிஞ்சும் 40 ஆண்டுகால அரசியல் பகை.. ஹாசனில் மோதும் 'பேரன்கள்'!
- Finance வீட்டுக் கடன்: EMI செலுத்தாட்டி, வீடு ஏலம் விடப்படுமா? RBI சொல்வது என்ன? வங்கிகளின் அதிகாரம் என்ன?
- Technology கைக்கு 2 ஆர்டர்.. அவ்ளோ கம்மி.. AMOLED டிஸ்பிளே.. ப்ளூடூத் காலிங்.. ஹெல்த் டிராக்கர்கள்.. எந்த மாடல்?
- Sports இதுதான் ரியல் ட்விஸ்ட்.. ஓய்வுக்கு பின் சிஎஸ்கே அணியின் முக்கிய பதவிக்கு வரப்போகும் தல தோனி?
- Automobiles தண்ணீரை சேமிக்க இப்படி ஒரு வழியா? இனி ரயில்களில் 1லிக்கு பதிலாக 500 மிலி தண்ணீர் மட்டும் வழங்க முடிவு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பிரபாஸுக்கு இந்த ஆண்டு கண்டிப்பாக திருமணமாம்: ஆனால் பெண் தான்...
Recommended Video
ஹைதராபாத்: பிரபாஸுக்கு இந்த ஆண்டு திருமணம் நடக்கும் என்று அவரின் பெரியப்பா கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார்.
பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் காதல் என்று கூறப்படுகிறது. நிஜ வாழ்க்கையிலும் அவர்கள் இணைய வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் விரும்புகிறார்கள்.
பிரபாஸை திருமணம் செய்ய ஆயிரக்கணக்கான பெண்கள் விருப்பம் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணம்
பிரபாஸுக்கு எப்பொழுது திருமணம் நடக்கும் என்று கேள்வி பல மாதங்களாக கேட்கப்படுகிறது. இந்நிலையில் அந்த கேள்விக்கு அவரது பெரியப்பா கிருஷ்ணம் ராஜு பதில் அளித்துள்ளார்.
விருப்பம்
ஒவ்வொரு பேட்டியிலும் பிரபாஸின் திருமணம் பற்றி கேட்கிறார்கள். பிரபாஸுக்கு இந்த ஆண்டு நிச்சயம் திருமணம் நடக்கும். அவரும் திருமணம் செய்ய விருப்பமாக உள்ளார் என்று கிருஷ்ணம் ராஜு தெரிவித்துள்ளார்.
விபரம்
பிரபாஸ் யாரை திருமணம் செய்யப் போகிறார், எப்பொழுது திருமணம் என்ற விபரங்களை கிருஷ்ணம் ராஜு தெரிவிக்கவில்லை. சினிமா துறையை சேராத ஒரு பெண்ணை பார்த்து வைத்திருப்பதாக முன்பே செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.
மாப்பிள்ளை
நானும், பிரபாஸும் கராதலிக்கவில்லை. நல்ல நண்பர்கள் மட்டுமே. நல்ல பையன் கிடைத்தால் உடனே திருமணம் செய்து கொள்வேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுஷ்கா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.