Don't Miss!
- Sports IPL 2024 :"போர் வீரன்" ஆட்டத்தால் தோல்வியடைந்த சிஎஸ்கே.. கடைசி 5 ஓவரில் நடந்த மேஜிக்.. லக்னோ வெற்றி
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“அனுஷ்கா மிகவும் அழகானவர்.. அதனால் தான்..” முதன்முறையாக தங்கள் உறவு பற்றி மனம் திறந்த பிரபாஸ்!
அனுஷ்காவுடன் நட்பு மட்டுமே இருப்பதாக நடிகர் பிரபாஸ் தெளிவு படுத்தியுள்ளார்.
Recommended Video
சென்னை: அனுஷ்காவுக்கும், தனக்கும் இடையேயான உறவு குறித்து நடிகர் பிரபாஸ் முதன்முறையாக விளக்கமாக ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.
தெலுங்கில் முன்னணி நாயகர்களுள் ஒருவராக இருப்பவர் நடிகர் பிரபாஸ். இவரும் நடிகை அனுஷ்காவும் பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் படத்தில் சேர்ந்து நடித்தனர். அப்படத்தில் அவர்களது கெமிஸ்ட்ரி பெரிதும் பேசப்பட்டது. அதோடு அப்படத்தின் போது இருவரும் காதலில் விழுந்ததாகவும், விரைவில் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தங்களுக்குள் இருப்பது காதல் அல்ல நட்பு தான் என்றெ இருவரும் கூறி வந்தனர். அவர்கள் அப்படிச் சொன்னாலும், காதல் வதந்தி மட்டும் ஓய்ந்தபாடில்லை.
இந்நிலையில், அனுஷ்காவுடனான தனது உறவு குறித்து முதன்முறையாக மிகவும் விளக்கமாக பேட்டி கொடுத்துள்ளார் நடிகர் பிரபாஸ். அதில், "வதந்திகள் எப்போதுமே இருந்து கொண்டே தான் இருக்கும். சிறிதுகாலத்திற்கு முன்பு இந்த வதந்தி கொஞ்சம் அடங்கி இருந்தது. தற்போது மீண்டும் ஆரம்பித்து விட்டார்கள்.
நானும் அனுஷ்காவும் சில படங்களில் சேர்ந்து நடித்துள்ளோம். எங்கள் இருவருக்கும் இடையில் 11 ஆண்டுகள் நட்பு இருக்கிறது. மற்றவர்கள் நினைப்பது போல், நிஜமாகவே எங்களுக்குள் ஏதாவது ஒரு உறவு இருந்தால் அதனை ஏன் நாங்கள் மறைக்க வேண்டும். அப்படி ஒரு கட்டாயமே இல்லையே.
எங்கள் இருவரில் யாராவது ஒருவருக்காவது திருமணம் ஆகும் வரை இந்த வதந்தி நிற்காது. அனுஷ்கா மிகவும் அழகானவர். அதனால் தான் பாகுபலியில் தேவசேனை கதாபாத்திரத்தில் நடித்தார். அவரையும் என்னையும் திரையில் இருக்கும் ஒரு ஜோடியாகத் தான் மக்கள் பார்க்கிறார்கள்.
இந்த வதந்திகளை எப்படி நிறுத்துவது என எனக்குத் தெரியவில்லை. நிச்சயம் ஒருநாள் நான் திருமணம் செய்து கொள்வேன். எனக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இருக்கிறது. சமீபத்தில் திருமணம் பற்றிய எண்ணம் எனக்கு வந்தது. ஆனால் அப்போது படவேலைகளில் பிசியாக இருந்ததால் திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் சீக்கிரமே திருமணம் செய்து கொள்வேன் என நம்புகிறேன்" என பிரபாஸ் அப்பேட்டியில் தெரிவித்துள்ளார்.
சாஹோ வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் பிரபாஸ் ஷ்ரத்தா கபூருடன் மற்றொரு படத்தில் சேர்ந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே