Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
அனுஷ்கா அல்ல அமெரிக்க தொழில் அதிபர் மகளை மணக்கும் பிரபாஸ்?
ஹைதராபாத்: நடிகர் பிரபாஸ் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபரின் மகளை திருமணம் செய்யக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
பாகுபலி படத்தில் நடித்த போது பிரபாஸுக்கும், அனுஷ்காவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது என்று பேச்சு கிளம்பியது. அய்யோ, அனுஷ்கா என் காதலி இல்லை தோழி மட்டுமே என்று பிரபாஸ் பல முறை விளக்கம் அளித்தும் யாரும் நம்பவில்லை.
பிரபாஸ் விஷயத்தில் அனுஷ்கா அமைதியாக உள்ளார். பிரபாஸுக்கு விரைவில் திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகளை பிரபாஸ் திருமணம் செய்யப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சுஜீத் இயக்கத்தில் பிரபாஸ், பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ள சாஹோ படம் வரும் 30ம் தேதி ரிலீஸாக உள்ளது. அந்த படம் ரிலீஸான பிறகு பிரபாஸின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபாஸ் அனுஷ்காவை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவர்களின் ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். உங்களுக்கு ஏற்ற ஜோடி அனுஷ்கா தான் பிரபாஸ் காரு என்று ரசிகர்கள் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு பிரபாஸ் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்வதில் விருப்பம் இல்லை.
முன்னதாக சாஹோ படம் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. அதே நாளில் அக்ஷய் குமாரின் மங்கள்யான் படம் ரிலீஸாவதால் சாஹோ ரிலீஸை தள்ளி வைத்துவிட்டார்கள். சாஹோ ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீஸாவதாக இருந்ததால் தான் அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தின் ரிலீஸ் தேதியே மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி 2 படத்தை அடுத்து பிரபாஸ் நடித்துள்ள படம் சாஹோ. அந்த படத்தின் போஸ்டர்கள் வெளியான போது அது ஹாலிவுட்டில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சாஹோ படத்திற்காக பணத்தை தண்ணீராக செலவு செய்துள்ளனர். சாஹோ மூலம் ஷ்ரத்தா கபூர் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.