Don't Miss!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Automobiles ரோடு இல்லாத இடத்துக்கு கூட தைரியமா கொண்டு போகலாம்!! விலை மட்டும் கொஞ்சம் கம்மியா இருந்தால் எல்லாரும் வாங்கலாம்
- News திருச்சூர் பூரம் திருவிழா சர்ச்சை: பாஜக சுரேஷ் கோபியை ஜெயிக்க வைக்குதா சிபிஎம்? காங்கிரஸ் ஆவேசம்!
- Lifestyle புடவை கட்டினால் புற்றுநோய் வருகிறதாம்.. ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்
Recommended Video
சென்னை: உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம் தான் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். படங்கள் குறித்து மட்டும் அல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்தும் ட்வீட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் நித்யானந்தா பற்றி ட்வீட்டியுள்ளார்.
|
சுடர்க்கொடியே
உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு என்று கொந்தளித்துள்ளார் பிரசன்னா.
கமெண்ட்
அண்ணன் வைரமுத்து பத்தி வாய் திறக்க மாட்டேள்...ஆனா நித்யானந்தா பத்தி பேசுவெள்.. நீயெல்லாம் இந்து.. பயந்து நடுங்காதே எதிர்த்து உயிர் விடு!! இல்லேனா மூடிட்டு இரு.. உனக்கு அந்த பெண்கள் எவ்வளவோ மேல்..என்று ஒருவர் பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.
ஆண்டாள்
நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழ பழக்கவில்லையே அன்பரே. மனதார சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியென படுகிறதா? சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழி மாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்ல வேண்டியதில்லை என்றார் பிரசன்னா.
ஸ்வாமி
வைரமுத்துக்கு நித்யானந்தா என்று இன்னொரு பெயர் உண்டா !இருக்கலாம்!தாயாரை இழிவுபடுத்தி ஆனந்தமாய் இருக்கிறார் என்று ஒருவர் கூறியதை பார்த்த பிரசன்னா, ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைகளைக்காட்டிலும் ஆண்டாளின் பெருமை மிகப்பெரியதன்றோ ஸ்வாமி? தெய்வத்திற்கு பழியுண்டோ? என்று கேட்டுள்ளார்.