Don't Miss!
- Finance Tesla: எலான் மஸ்க் அதிரடி.. 6000 ஊழியர்கள் பணிநீக்கம்.. லாபத்தில் 55% சரிவு..!
- Lifestyle 300 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட முகலாயர்கள் அவங்க ஆட்சியில் இந்தியாவின் எந்தெந்த விஷயங்களை மாற்றினார்கள் தெரியுமா?
- Technology ரூ.56,999 க்கு அறிமுகமான OnePlus போனை ரூ.19,149 க்கு விற்கும் Amazon.. ஆல் ஏரியாவிலும் ஆர்டர் பறக்குது!
- News மகளிர் உரிமை தொகை திட்டத்தில்.. வருகிறது மிகப்பெரிய விதி மாற்றம்? பெண்கள் எதிர்பார்த்த முக்கிய சலுகை
- Automobiles வெள்ளை நிற ஹெட்லைட் போட்ட வண்டிகளுக்கு எல்லாம் அபராதம் போட போறாங்க! அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!
- Sports "இந்தியாவின் ஒரே பாட்ஷா" சச்சினின் 51வது பிறந்தநாள்.. கொண்டாடும் தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா!
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இந்து மதத்தை கொச்சைப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டமே: பிரசன்னா கோபம்
Recommended Video
சென்னை: உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம் தான் என்று நடிகர் பிரசன்னா தெரிவித்துள்ளார்.
நடிகர் பிரசன்னா பட வேலைகளில் பிசியாக இருந்தாலும் ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளார். படங்கள் குறித்து மட்டும் அல்லாமல் நாட்டு நடப்புகள் குறித்தும் ட்வீட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் நித்யானந்தா பற்றி ட்வீட்டியுள்ளார்.
|
சுடர்க்கொடியே
உண்மையில் இந்து மதத்தை கொச்சைப்படுத்த அசிங்கப்படுத்த கிளம்பியிருப்பது நித்யானந்தா கூட்டம்தான். அழித்தொழிக்கப்படவேண்டிய இந்து எதிரி இக்கூட்டமே! சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே இவ்வர்ப்ப பதர்களை சுட்டெரித்துவிடு என்று கொந்தளித்துள்ளார் பிரசன்னா.
கமெண்ட்
அண்ணன் வைரமுத்து பத்தி வாய் திறக்க மாட்டேள்...ஆனா நித்யானந்தா பத்தி பேசுவெள்.. நீயெல்லாம் இந்து.. பயந்து நடுங்காதே எதிர்த்து உயிர் விடு!! இல்லேனா மூடிட்டு இரு.. உனக்கு அந்த பெண்கள் எவ்வளவோ மேல்..என்று ஒருவர் பிரசன்னாவின் ட்வீட்டை பார்த்து கமெண்ட் போட்டுள்ளார்.
ஆண்டாள்
நம் இந்துமதம் ஒருபோதும் தரம் தாழ பழக்கவில்லையே அன்பரே. மனதார சொல்லுங்கள் உங்களுக்கு அவர்கள் செயல் சரியென படுகிறதா? சிறுவயதில் உபன்யாசங்கள் மார்கழி மாதம் அதிகாலை பஜனை என்று பக்தி பழகிய எனக்கு ஆண்டாளின் பெருமை யாரோ சொல்ல வேண்டியதில்லை என்றார் பிரசன்னா.
ஸ்வாமி
வைரமுத்துக்கு நித்யானந்தா என்று இன்னொரு பெயர் உண்டா !இருக்கலாம்!தாயாரை இழிவுபடுத்தி ஆனந்தமாய் இருக்கிறார் என்று ஒருவர் கூறியதை பார்த்த பிரசன்னா, ஒரு சாதாரண மனிதனின் வார்த்தைகளைக்காட்டிலும் ஆண்டாளின் பெருமை மிகப்பெரியதன்றோ ஸ்வாமி? தெய்வத்திற்கு பழியுண்டோ? என்று கேட்டுள்ளார்.