twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கிரகலட்சுமியின் முதல் கல்யாணம்-பிரஷாந்த் தரும் கூடுதல் ஆதாரம்

    By Staff
    |

    தனது மனைவி கிரகலட்சுமிக்கும், வேணுகோபால் பிரசாத்துக்கும் இடையே நடந்த முதல் திருமணம் தொடர்பான மேலும் பல ஆதாரங்களை காவல் துறையிடம் நடிகர் பிரஷாந்த் ஒப்படைத்துள்ளார்.

    நடிகர் பிரஷாந்த்-கிரகலட்சுமி விவகாரம் நாளுக்கு நாள், கிரகலட்சுமிக்குப் பாதகமாகிக் கொண்டே போகிறது.

    கிரகலட்சுமியின் முதல் திருமணம் குறித்த முதல் தகவலை பிரஷாந்த் வெளியிட்டபோது அனைவரும் அதிர்ந்தனர். அத்தோடு நில்லாமல் கிரகலட்சுமியின் முதல் கணவர் பெயர் வேணுபிரசாத், அவர் கேரளாவைச் சேர்ந்தவர், இருவரும் காதலித்து பதிவு திருமணம் செய்து கொண்டனர் என்று பிரஷாந்த் புகார்களை அடுக்கினார்.

    ஆனால் இது பொய்யான தகவல், எனக்கும் பிரசாத்துக்கும் கல்யாணம் நடக்கவில்லை. பிரசாத்தின் சகோதரி எனக்குத் தோழி. அவரிடம் எனது பட்டப் படிப்புச் சான்றிதழை அளித்திருந்தேன். அதில் உள்ள கையெழுத்தைத் திருடி, தனக்கு கல்யாணமானதாக போலியான வாக்குமூலம் கொடுத்துள்ளார் பிரசாத் என்று கிரகலட்சுமி போலீஸில் தெரிவித்தார்.

    ஆனால் கிரகலட்சுமிக்கும், பிரசாத்துக்கும் இடையே கல்யாணம் நடந்ததற்கு பல சாட்சியங்கள் தன்னிடம் இருப்பதாக பிரஷாந்த் தரப்பு கூறியது.

    இந்த நிலையில் பிரஷாந்த் புதிய மனு ஒன்றை மாம்பலம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதில் கிரகலட்சுமி-வேணு பிரசாத் கல்யாணம் தொடர்பான புதிய ஆதாரத்தைக் கொடுத்துள்ளார்.

    அந்த மனுவில், கிரகலட்சுமியின் கிரெடிட் கார்டில் தனது கணவராக வேணுபிரசாத் பெயரை கிரகலட்சுமி தெரிவித்துள்ளார். இது அவர்கள் இருவரும் கணவன், மனைவியாக இருந்ததற்கான முக்கிய ஆதாரம் என்று பிரஷாந்த் கூறியுள்ளார்.

    பிரஷாந்த் அடுக்கடுக்காக ஆதாரங்களையும், குற்றச்சாட்டுக்களையும் சுமத்தி வருவதால் கிரகலட்சுமி பக்கம் பலவீனமாகிக் கொண்டு வருகிறது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X