விஜய்க்கு ஆதரவு உண்டா?.. டாப் ஸ்டார் பிரசாந்த் சொன்ன நச் பதில்
சென்னை: பிரசாந்த் 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர். இப்போது டாப் லெவலில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் உள்ளிட்டோரைவிட பிரசாந்த்துக்கு கிரேஸ் இருந்தது. ஆண் ரசிகர்கள் மட்டுமின்றி பெண் ரசிகைகளை தன் பக்கம் ஈர்த்திருந்தார். ஷங்கர், மணிரத்னம் என முன்னணி இயக்குநர்களோடும் பணியாற்றினார். சில காரணங்களால் சினிமாவிலிருந்து காணாமல் போன அவர் அந்தகன் படத்தில் பல வருடங்களுக்கு பிறகு ஹீரோவாக நடித்திருக்கிறார்.
நடிகர் பிரசாந்த் தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வந்தவர். தியாகராஜனின் மகனான இவர் வைகாசி பொறந்தாச்சு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். முதல் படமே மெகா ஹிட்டானது. அழகும், திறமையும் ஒருசேர இருந்ததாலும்; முதல் படமே மெகா ஹிட்டானதாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அமைந்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவருக்கு தொட்டதெல்லாம் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் பல ஊர்களில் பிரசாந்த்துக்கென்று ரசிகர் மன்றங்கள் முளைக்கத் தொடங்கின.

திருடா திருடா: அதனையடுத்து பாலுமகேந்திராவின் இயக்கத்தில் நடித்தார். அதனைத் தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த பிரசாந்த் மணிரத்னம் இயக்கத்தில் திருடா திருடா படத்தில் நடித்தார். பிறகு தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி நடிகர் என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். குறிப்பாக இப்போது டாப் ஸ்டார்களாக இருக்கும் விஜய், அஜித் ஆகியோரைவிடவும் உயர்ந்த நிலையில் 90களில் இருந்தவர் பிரசாந்த். சொல்லப்போனால் அவருக்கு நேரமும், சூழ்நிலையும் ஒழுங்காக இருந்திருந்தால் இன்று விஜய்யோ, அஜித்தோ இருவரின் ஒரு இடத்தை அவர்தான் அலங்கரித்திருப்பார்.
சறுக்கல்: இப்படி உச்சத்தில் சென்றுகொண்டிருந்த பிரசாந்த்துக்கு சில சறுக்கல்கள் ஏற்பட்டன. அதற்கு முக்கிய காரணம் அவரது மனைவிக்கும் அவருக்கும் நடந்த பிரச்னைதான் என கூறப்படுகிறது. மேலும் அந்த பிரச்னையில் கவனம் செலுத்தியதால் சினிமாவில் அவரால் கவனம் செலுத்த முடியவில்லை எனவே வாய்ப்புகள் குறைந்துபோயின என்ற கூற்றும் உண்டு. மனைவி பிரச்னை மட்டுமின்றி பிரசாந்த்தின் வாழ்க்கையில் தந்தையின் தலையீடு அதிகம் இருந்ததாலும் பிரசாந்த் பாதியிலேயே காணாமல் போய்விட்டார் என்றும் திரைத்துறையில் ஒரு பேச்சு உண்டு.
ரீ என்ட்ரி: பல வருடங்கள் ஒதுங்கியிருந்த பிரசாந்த் அந்தகன் படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படம் ஹிந்தி படமான அந்தாதூன் படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தகன் படத்தில் நவரச நாயகன் கார்த்திக், சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி உள்ளிட்டோரும் பிரசாந்த்துடன் நடித்திருக்கிறார்கள். படத்தை நடிகரும் பிரசாந்த்தின் தந்தையுமான தியாகராஜன் இயக்குகிறார். ஷூட்டிங் எல்லாம் முடிந்துவிட்டாலும் படம் ரிலீஸாகாமலேயே இருந்தது. சூழல் இப்படி இருக்க ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்தகன் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
பிரசாந்த் செய்தியாளர் சந்திப்பு: இதற்கிடையே ஹெல்மெட் போடாமல் அவர் வண்டி ஓட்டியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”ஹெல்மெட் விவகாரம் பற்றி கேட்பீர்கள் என்று எனக்கு தெரியும். அதனால்தான் முன்கூட்டியே தயாராக வந்திருக்கிறேன். நான் பால்முறை போக்குவரத்து விழப்புணர்வு பற்றி கூறியிருக்கிறேன். பேரணிகூட சென்றிருக்கிறேன். அது உங்களுக்கே தெரியும். இதனை இன்னொரு விழுப்புணர்வு ஏற்படுத்தும் தருணமாக பார்க்கிறேன்.
விஜய்யின் அரசியல்: விஜய் அரசியலுக்கு வருவது நல்ல விஷயம்தான். அவர் அரசிய்லுக்கு வரட்டும். நல்லது யார் செய்தாலும் நான் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பேன். விஜய் நல்லது செய்கிறாரா இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்ல வேண்டும். நான் நல்லது செய்பவர்களுக்கு கண்டிப்பாக ஆதரவு கொடுப்பேன்” என்றார்.


Click it and Unblock the Notifications











