நாளை பிரஷாந்த் திருமணம் காதல் இளவரசன் நடிகர் பிரஷாந்த்-கிரஹலட்சுமி திருமணம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை)முதல்வர் ஜெயலலிதாதலைமையில் நடைபெறுகிறது.வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமாகிய பிரஷாந்த், இளம் தலைமுறை நடிகர்களில் மிக மூத்தவர் ஆவார். 60க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரஷாந்த், தனக்குப் பின்னர் வந்த அஜீத், விஜய் ஆகியோர் திருமணமாகி செட்டிலானபிறகும் தொடர்ந்து பேச்சிலராக இருந்து வந்தார்.இந் நிலையில் அவருக்கும், அவர் வசிக்கும் அதே தி.நகர் பகுதியில் வசித்து வரும் கிரஹலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமானது.இவர்களது திருமணம் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நாளைகாலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது. மாலை 6.30 மணிக்கு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட இசையமைப்பாளர் தேவா குழுவினரின் இசைநிகழ்ச்சியும் நடக்கிறது.திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்துகிறார். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய்உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இத்திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.
காதல் இளவரசன் நடிகர் பிரஷாந்த்-கிரஹலட்சுமி திருமணம் சென்னையில் நாளை (வியாழக்கிழமை)முதல்வர் ஜெயலலிதாதலைமையில் நடைபெறுகிறது.
வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் அறிமுகமாகிய பிரஷாந்த், இளம் தலைமுறை நடிகர்களில் மிக மூத்தவர் ஆவார். 60க்கும்மேற்பட்ட படங்களில் நடித்துள்ள பிரஷாந்த், தனக்குப் பின்னர் வந்த அஜீத், விஜய் ஆகியோர் திருமணமாகி செட்டிலானபிறகும் தொடர்ந்து பேச்சிலராக இருந்து வந்தார்.
இந் நிலையில் அவருக்கும், அவர் வசிக்கும் அதே தி.நகர் பகுதியில் வசித்து வரும் கிரஹலட்சுமிக்கும் திருமணம் நிச்சயமானது.இவர்களது திருமணம் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மண்டபத்தில் நாளைகாலை 7.45 மணிக்கு நடைபெறுகிறது.
மாலை 6.30 மணிக்கு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திரைப்பட இசையமைப்பாளர் தேவா குழுவினரின் இசைநிகழ்ச்சியும் நடக்கிறது.
திருமணத்தை முதல்வர் ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்துகிறார். இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், ஐஸ்வர்யா ராய்உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் இத்திருமண விழாவில் கலந்து கொள்கின்றனர்.


Click it and Unblock the Notifications