Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹீரோவாக களம் இறங்கும் முரட்டு சிங்கிள் பிரேம்ஜி
சென்னை : சுரேஷ் சங்கையா இயக்க உள்ள படத்தில் ஹீரோவாக பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது இசையில் கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி, 'பார்ட்டி' படத்திற்கு இசையமைத்து வருகிறார்.
பிரேம்ஜி என்றால் நம் நினைவிற்கு வருவது மங்காத்தா தான். இவர் பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரனின் மகன் என்பது அனைவருக்கும் தெரியும். இவர், சரோஜா, கோவா, பிரியாணி, மாஸ் என்ற படங்களில் காமெடியில் கலக்கி இருப்பார். எப்போதும் ஜாலியாக இருக்கும் இவர் இன்னும் முரட்டு சிங்குளாகவே உள்ளார்.
இசையின் மீது ஆர்வம் கொண்ட பிரேம்ஜி பல படங்களில் பாடியிருக்கிறார். சென்னை 28ல 'வாழ்க்கையை யோசிங்க' பாடல், 'சரோஜா சாமானிக்காலோ' போன்ற பாடல்கள் எல்லாம் செம ஹிட் ஆனாது. மேலும், யுவன் சங்கர் ராஜாவின் கீழ் பின்னணி இசையில் பணியாற்றியும் இருக்கிறார்.
இசையை தாண்டி அதிகபடியாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்த பிரேம்ஜி, வெங்கட்பிரபு படத்தில் கண்டிப்பாக எதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்து விடுவார். மேலும் இவர் அண்ணன் படத்தில் தான் அதிகம் நடித்தும் இருக்கிறார். பிரேம்ஜி இல்லாமல் வெங்கட் பிரபு இயக்கும் முதல் படமும் பார்ட்டி தான் .
தற்போது பிரேம்ஜி சுரேஷ் சங்கையா இயக்கப் போகும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார். அந்த படத்தில் ஹீரோவாக பிரேம்ஜி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாக உள்ளது. இதுவரை ஹீரோவாக நடிக்காத பிரேம்ஜி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சுரேஷ் சங்கையா 'ஒரு கிடாயின் கருணை மனு' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் ஆவார். இப்படம் மக்களிடையே நல் மதிப்பை பெற்றது.
பிரேம்ஜி கடைசியாக சிம்பா படத்தில் ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். தற்போது இசையில் கவனம் செலுத்தி வரும் பிரேம்ஜி, தன் அண்ணன் படமான பார்ட்டி படத்திற்கு இசையமைத்து வருகிறார்.