Don't Miss!
- Education தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் பணிபுரிய அற்புதமான வாய்ப்பு..!
- News "இது" வேற வெளியே வந்துருச்சு.. காந்திராஜ் தோட்டத்தில்.. அது பாட்டுக்கு போகுது.. திகைத்த தஞ்சாவூர்
- Travel தமிழ்நாட்டுக்குள்ள வெயில் கொளுத்துது – ஆனா இந்தியாவின் இந்த இடங்களில பனிச்சரிவு – என்ன வினோதம் இது?
- Sports IPL 2024 : சிஎஸ்கே கேப்டனுக்கு கல்தா.. பிசிசிஐ எடுத்த அதிரடி முடிவு.. சுப்மன் கில் வைத்த ட்விஸ்ட்
- Lifestyle உங்கள் தலைமுடி வலுவாக வளரனுமா? அப்போ இதை சாப்பிடுங்கள்..!
- Finance அஜித் குமார்-க்கு கிடைத்த புதிய பதவி.. இனி மாஸ் தான்..!!
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி அல்லது மறுதேர்தலே சரியான தீர்வு: அரவிந்த்சாமி
சென்னை: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வர வேண்டும் அல்லது மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று நடிகர் அரவிந்த் சாமி ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிலவும் அசாதாரண அரசியல் சூழல் குறித்து தான் ஒட்டு மொத்த இந்தியாவே பேசிக் கொண்டிருக்கிறது. நாடே தமிழகத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
நடிகர் அரவிந்த்சாமியும் தமிழக அரசியல் நெருக்கடியை கவனித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்று ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Allegations of MLAs being influenced,isolated,how can even the floor test be indicative?President's rule & re-election seems the best option
— arvind swami (@thearvindswami) February 10, 2017
எம்.எல்.ஏ.க்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக செயல்படுவது, தனிமைப்படுத்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அப்படி இருக்கும்போது நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி சரியான தீர்வாக அமையும்? ஜனாதிபதி ஆட்சி அல்லது மறு தேர்தலே சரியான தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் சூழல் குறித்து பிறர் தெரிவிக்கும் கருத்துகள் மற்றும் செய்திகளையும் ரீட்வீட் செய்து வருகிறார் அரவிந்த்சாமி என்பது குறிப்பிடத்தக்கது.