Don't Miss!
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- News 664 மனு நிராகரிப்பு! தமிழக லோக்சபா தேர்தலில் 1085 வேட்புமனு ஏற்பு! எந்த தொகுதியில் அதிகம் தெரியுமா
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
இப்படி பண்ணிட்டாருங்க... நடிகர் அதர்வா மீது பரபரப்பு புகார்... தயாரிப்பாளர் சங்கத்தில் பஞ்சாயத்து
சென்னை: தனது படத்தில் நடித்துக்கொடுக்காமல் இழுத்தடிப்பாதாக நடிகர் அதர்வா மீது தயாரிப்பாளர் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார்.
நடிகர் அதர்வா சொந்த தயாரிப்பில் நடித்து வெளிவந்த திரைப்படம், செம போத ஆகாதே. இந்த படத்தின் உரிமையை தயாரிப்பாளர் மதியழகன் என்பவருக்கு ரூ.5.5 கோடிக்கு கொடுத்திருந்தாராம் அதர்வா. இந்தப் படம் படுதோல்வி அடைந்தது.
இளம் நடிகர்கள் திறமையானவர்கள்.. எப்படியும் நடிப்பார்கள்.. சார்லி புகழாரம்
கடும் நஷ்டம்
இதனால் மதியழகனுக்கு கடும் நஷ்டம். அதை சரிகட்ட அதர்வா ஒரு படத்தில் நடித்துக் கொடுப்பதாகக் கேட்கப்பட்டது. சரி என்றாராம் அதர்வா. இதற்காக அவருக்கு ரூ.50 லட்சம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார் மதியழகன்.
இழுத்தடிக்கிறார்
இந்நிலையில், தன்னிடம் அட்வான்ஸ் வாங்கிவிட்டு, படம் நடித்துக் கொடுக்காமல் இழுத்தடிப்பதாகவும் அவரால் தனது 6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன் போலீசில் புகார் அளித்திருந்தார்.
பலமுறை அழைத்தும்
தயாரிப்பாளர் சங்கத்திலும் இதுபற்றி புகார் அளித்திருந்தார் மதியழகன். இதுபற்றி விசாரிக்க, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அதர்வாவுக்கு பலமுறை அழைப்பு விடுத்தும் வரவில்லை என்று கூறப்படுகிறது.
பிரச்னையை முடிக்காமல்
இதனால், இந்தப் பிரச்னையை முடிக்காமல் அவர் நடித்துள்ள மற்றப்படங்களை வெளியிடக் கூடாது என்று தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் தெரிவித்தார்களாம். இதனால் பதறியடித்து, தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் விசாரணைக்கு நடிகர் அதர்வா நேற்று சென்றார்.
விசாரணை
அப்போது அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மதியழகனிடம், தான் ரூ.50 லட்சம் அட்வான்ஸ் வாங்கவில்லை என்றும் ரூ.20 லட்சம்தான் வாங்கினேன் என்றும் அதர்வா தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் மதியழகன், சங்கத்துக்கு நேற்று வராததால், இந்த பிரச்னையை இன்னும் சில நாட்கள் கழித்து மீண்டும் பேச உள்ளனர்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது விஜய்யின் கடைசி படத்தை இயக்கப்போவது இவரா?.. தரமான சம்பவமா இருக்குமோ?.. அப்போ அவங்க நிலைமை
-
இதை சொல்ல கூச்சமே இல்லை.. அப்பாவால்தான் வாய்ப்பு கிடைத்தது.. பிருத்விராஜ் ஓபன் டாக்