Don't Miss!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Lifestyle முடி உதிர்ல் முதல் பொடுகு வரை அனைத்துப் பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு.. இந்த ஹேர் மாஸ்க்கை ட்ரை பண்ணுங்க...!
- Sports 27 பந்துகளில் ஒரு பவுண்டரி கூட இல்லை.. பொறுப்பே இல்லை.. இதுதான் அதிரடி பேட்டிங்கா விராட் கோலி!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
சிவாஜியிடம் பிரமித்த ரஜினி!
சிவாஜி படத்திற்கு டப்பிங் பேச வந்த ரஜினிகாந்த் படத்தின் காட்சிகளைப் பார்த்து பிரமித்துப் போய் விட்டராம். அட, இதுநான்தானாப்பா என்று ஆச்சரியமாகக் கேட்டாராம் ஷங்கரிடம்.
மெகா இயக்குனர் ஷங்கர், மகா தயாரிப்பாளர் ஏவி.எம்., சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஜிகா இசையமைப்பாளர்ஏ.ஆர்.ரஹ்மான். இத்தனை பெரும் தலைகளும் சேர்ந்திருப்பதால் சிவாஜி படத்திற்கு எதிர்பார்ப்புகள் எக்கச்சக்கமாகியுள்ளது.படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. டாக்கி போர்ஷன் எனப்படும் வசனக் காட்சிகள் முக்கால்வாசியைமுடித்து விட்டார் ஷங்கர். இன்னும் கொஞ்சம்தான் பாக்கி உள்ளதாம்.
விரைவில் அப்பா ரஜினி சம்பந்தப்பட்ட காட்சிகளை அமெரிக்காவில் படமாக்க உள்ளனர். அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்தஇன்னும் அனுமதி கிடைக்கவில்லையாம். கிடைத்ததும் பறக்க உள்ளனர்.
அதுவரை இருக்கும் இடைவெளியில் தான் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு ரஜினி டப்பிங் பேசி வருகிறார். ஏவி.எம்.ஸ்டுடியோவில் உள்ள டப்பிங் தியேட்டரில் இந்த வேலை கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது.
ஏற்கனவே விவேக், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் பேசி முடித்து விட்டனர். இப்போது ரஜினி பேசி வருகிறார். டப்பிங்பேச வந்த ரஜினி, காட்சிகளைப் பார்த்து விட்டு அசந்து விட்டாராம்.
படு அற்புதமாக வந்திருப்பதாக ஷங்கரைப் பாராட்டினாராம். சில காட்சிகளைப் பார்த்து விட்டு அட, இது நான்தானா என்றுவியந்தாராம். சண்டைக் காட்சிகளை படமாக்கியிருந்த விதமும் ரஜினிக்குப் பிடித்துப் போய் விட்டதாம்.
இந்தப் படம் எனக்கும், தமிழ் சினிமாவுக்கும் பெரிய மைல் கல்லாக இருக்கும் என்று நெருங்கியவர்களிடம் சொல்லிச்சந்தோஷப்பட்டு வருகிறார் ரஜினி.