Don't Miss!
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- News சென்னை பயணிகள் கவனத்துக்கு.. நாளை மெட்ரோ ரயில் நேரத்தில் மாற்றம்.. தேர்தலையொட்டி மேஜர் அறிவிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
'ரோபோட்'டில் ரஜினி?
ரூ. 100 கோடி பட்ஜெட்டைப் போட்டு வைத்து ரோபோட் படக் கதையுடன், 'ஆள்' கிடைக்காமல் ரொம்ப நாளாகவே ஷங்கர் அலைபாய்ந்து கொண்டிருக்கிறார்.
முதலில் இப்படத்தில் கமல்ஹாசன் நடிப்பதாக இருந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால் திடீரென கமல் கழன்று கொண்டு விட்டார்.
இதையடுத்து ரோபோட்டை கிடப்பில் போட்டு விட்டார் ஷங்கர். இடையில் அந்நியன், பிறகு சிவாஜி என இரு பெரும் படங்களை எடுத்து முடித்து ரிலீஸ் செய்தார்.
சிவாஜியை முடித்த கையோடு மீண்டும் ரோபோட்டை கையில் எடுத்த ஷங்கர் இந்த முறை ஷாருக்கானை அணுகினார். அவரும் ஆர்வமாகி நடிக்க ஒப்புக் கொண்டார். அத்தோடு நில்லாமல் படத்தையும் தயாரிக்க முன்வந்தார்.
எல்லாம் கை கூடி வந்த நிலையில், திடீரென ஷாருக்கானும் படத்திலிருந்து விலகிக் கொண்டார். நானும், ஷங்கரும் நட்போடு பிரிந்து விட்டோம் என்றும் அறிவித்தார்.
இதனால் அப்செட் ஆன ஷங்கர், அடுத்ததாக அஜீத்தை அணுகினார். இதை அஜீத்தே உறுதிப்படுத்தினார். ரோபோட் குறித்து ஷங்கருடன் விவாதித்துள்ளதாக தெரிவித்திருந்தார். அதன் பிறகு இதில் பாலோஅப் எதுவும் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் திடீரென ரஜினியின் பெயர் இதில் அடிபட ஆரம்பித்துள்ளது. ஷங்கரின் ரோபோட் படத்தில் ரஜினி நடிக்கப் போவதாகவும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் படத் தயாரிப்புப் பிரிவான ஆட்லேப்ஸ் இந்த மெகா பட்ஜெட் படத்தை தயாரிக்கப் போவதாகவும், இதுதொடர்பாக ஷங்கர் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தி விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
ஆனால் இந்த செய்தியை உறுதிப்படுத்த யாரும் முன்வரவில்லை. இயக்குநர் ஷங்கரின் செய்தித் தொடர்பாளரிடம் இதுகுறித்து கேட்டபோது முதலில் சிரித்தார். பிறகு, இப்படி ஒரு திட்டம் ஷங்கர் சாரிடம் இல்லை. அப்படி இருக்கையில் எப்படி இப்படி ஒரு செய்தி வந்தது என்று தெரியவில்லை என்றார்.
மேலும் ஆட்லேப்ஸ் நிறுவனத்தின் சென்னைக் கிளையும் கூட இந்தத் தகவல் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.