Don't Miss!
- News சனாதன ஒழிப்பு, மத வெறுப்பு, கோயில்கள் இடிப்பு வேண்டாமே! முதல்வர் ஸ்டாலினுக்கு இந்து முன்னணி கோரிக்கை
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மீண்டும் ஒரே மேடையில் ரஜினி - கமல்!
சில மாதங்களுக்கு முன்பு கும்கி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று, விக்ரம் பிரபுவை வாழ்த்தினர் இருவரும்.
அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெற்றுவிட்டது. இப்போது படம் நூறு நாள்களைத் தாண்டிவிட்டது.
இந்த வெற்றி விழாவையும் ரஜினி - கமல் தலைமையில் கொண்டாட விரும்பி, இருவருக்கும் அழைப்பிதழையும் வைத்துள்ளார் தயாரிப்பாளர் லிங்குசாமியும், ஹீரோவின் தந்தை பிரபுவும்.
கமல் வர ஒப்புக் கொண்டுள்ளாராம். ரஜினியும் வருவார் என்ற நம்பிக்கையுடன் விழா ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.
கடந்த முறை, விழாவுக்கு ரஜினியை அழைத்த போது முதலில் வர மறுத்துவிட்டார். அழைப்பிதழில் அவர் பெயரையும் விழாக் குழுவினர் போடவில்லை.
ஆனால் கடைசி நேரத்தில் மின்னலாய் மேடையில் தோன்றி அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். இந்த முறையும் அதே போல செய்வார் சூப்பர் ஸ்டார் என்று எதிர்ப்பார்க்கின்றனர் பிரபுவும் லிங்குவும்.