தியானம் செய்யும் ரஜினி-ராகவேந்திரா பெயர் சொல்லி மாத்திரை சாப்பிடுகிறார்!

நடிகர் ரஜினிகாந்துக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
நுரையீரலில் நீர்க்கோர்ப்பு, மூச்சுத் திணறல் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டு மருத்துவர்களின் 24 மணிநேர கண்காணிப்பில் உள்ளார்.
அதேநேரம் ரஜினி நலமுடன் உள்ளதாகவும், இட்லி வடை, ரசம் போன்ற வழக்கமான உணவுகளை ருசித்து சாப்பிடுவதாகவும் அவருக்கு சிகிச்சை அளிக்கும் தலைமை டாக்டர் தணிகாசலம் கூறினார். இன்று அல்லது நாளை தனியறைக்கு மாற்றப்படுவார் என தெரிகிறது.
நெகிழ்ந்த ரஜினி...
இதற்கிடையில் ரஜினி நலம் பெற ரசிகர்கள் கோவில்களில் பிரார்த்தனை செய்யும் தகவல் அவருக்கு தெரிவிக்கப்பட்டது. அதை கேட்டதும் நெகிழ்ச்சியடைந்தார். பூரண நலம் பெற வாழ்த்து செய்தி வெளியிட்டவர்கள், மருத்துவமனைக்கு நேரில் வந்தவர்கள் விவரங்களும் தெரிவிக்கப்பட்டன. டிஸ்சார்ஜ் ஆனதும் அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட முடிவு செய்துள்ளார்.
மருத்துவமனையில் அடிக்கடி தியானம் செய்கிறார் என்றும் ராகவேந்திரா, ஷிர்டி சாய்பாபா ஆகியோரின் பெயர்களைச் சொல்லி மருந்துகளை சாப்பிடுகிறார் என்றும் 'ராணா' பட தயாரிப்பாளர் முரளி மனோகர் கூறினார்.
ரஜினி உடல்நிலை குறித்து வெளிநாட்டு டாக்டர்களுடனும் தொடர்ந்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. சிகிச்சைக்கு பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











