Don't Miss!
- Lifestyle உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. வருகிற ஏப்ரல் மாசம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- News மீண்டும் மீண்டுமா! அரவிந்த் கெஜ்ரிவாலை பதவி நீக்கம் செய்யக்கோரி டெல்லி ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல்
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சென்னை திரும்பியதும் ரசிகர்களைச் சந்திக்கிறார் ரஜினி!
இந்த முறை நிர்வாகிகளை மட்டும் சந்திக்காமல், ரசிகர்களையும் சந்திக்க அவர் விரும்புகிறாராம். எனவே அவர்கள் வந்து போக வசதியாக, சென்னையில் தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றைப் பார்த்து வருகின்றனர்.
சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ரஜினி, பூரண நலம் பெற்று இப்போது அங்கேயே அபார்ட்மெண்ட் ஒன்றில் ஓய்வெடுத்து வருகிறார்.
இன்னும் 15 நாட்களில் சென்னை வருவார் என்று ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை திரும்பியதும் தனது பழைய போயஸ் தோட்ட வீட்டில் குடியேறாமல், புதி வீட்டில் குடியேறுவார் என்று கூறப்படுகிறது.
ரஜினியின் போயஸ் தோட்ட வீடு இப்போது வாஸ்து சாஸ்திரப்படி மாற்றிக் கட்டப்படுகிறது.
மேலும் ரஜினி இனி இங்கு தங்கினால், அவரைப் பார்க்க ஏராளமான விவிஐபிகள் மற்றும் ரசிகர்கள் வர ஆரம்பிப்பார்கள். இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல், பாதுகாப்புக் கெடுபிடிகளைத் தவிர்க்க தற்காலிகமாக ஒரு புதுவீட்டுக்குப் போகிறாராம் ரஜினி.
கிருமி தொற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடாத நல்ல காற்றோட்டம் உள்ள தோட்டத்துடன் கூடிய வீடு ஒன்றில் அவர் குடியேறுகிறார். அத்தகைய வசதிகளுடன் உள்ள வீட்டை ரஜினியின் நண்பர்கள் தேடி வருகின்றனர்.
ரஜினி சென்னை திரும்பியதும் இந்த வீட்டில்தான் ரசிகர்களை தொடர்ந்து சந்திக்க முடிவு செய்துள்ளாராம். முன்புபோல விருப்பப்படும் ரசிகர்களுக்கு புகைப்படம் எடுத்துக் கொடுக்கவும் அவர் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் தொலைவில் உள்ள மாவட்ட ரசிகர்களை தானே நேரில் சென்று பார்க்கவும் முடிவு செய்துள்ளாராம் ரஜினி.
சென்னை திரும்பிய பின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையும் சந்தித்து நன்றி தெரிவிக்கவும் முடிவு செய்துள்ளார் ரஜினி.