Don't Miss!
- News மதுரை எய்ம்ஸ்க்கு புது சிக்கல்.. இன்னும் கட்டுமான பணி தொடங்கலையாம்.. கிளம்பிய புகாரால் ‛அப்செட்’
- Finance ஏப்ரல் 19: உலகிலேயே காஸ்ட்லியான தேர்தல் இந்தியாவில் நடக்கிறது.. தலைசுத்தவைக்கும் பட்ஜெட்..!
- Sports PBKS vs MI : நம்ம ஹர்சல் படேலா இது.. கடைசி 5 ஓவரில் 5 விக்கெட்ஸ்.. மும்பையை கலங்கடித்த பஞ்சாப்!
- Lifestyle இனிமே மாம்பழ தோலை தூக்கி எறியாம.. இப்படி டீ செஞ்சு குடிங்க.. இருமடங்கு நன்மை கிடைக்கும்...
- Automobiles தஞ்சாவூரில் பிறந்து பாலிவுட்டை கலக்கி கொண்டிருக்கும் டைரக்டர்!! புதுசா வாங்கியிருக்கும் காஸ்ட்லீ கார்!
- Technology UPI கெடு முடிந்தது.. Paytm யூசர்கள் உடனே இதை பண்ணுங்க.. NPCI கொடுத்த அப்ரூவல்.. இனி எஸ்பிஐ, எச்டிஎப்சிதான்!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஹீரோ .. ஹீரோ ..
ரஜினி தனது அடுத்த படத்தை விவசாயிகளைக் குறிவைத்தே எடுக்கப் போவதாக சொல்கிறார்கள். கதையின் கரு அவரது பெட் சப்ஜெக்டான நதிகள் இணைப்பு தான் என்கிறார்கள். ரஜினிக்கு இந்தக் கதையைச் சொன்னது தெலுங்கு சூப்பர் ஹிட் இயக்குனர் தேஜா.
அவருக்கு வேண்டிய சினிமா நிறுவனம் சமீபத்தில் விவசாயி என்ற தலைப்பை பிலிம் சேம்பரில் பதிவு செய்திருப்பதை நாம் ஏற்கனவே சொல்லியிருந்தோம். ஹரி, கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் வழக்கமான ரஜினி டைப் கதைகள் சொல்ல, தெலுங்கில் காமெடி படங்களில் கொடி கட்டிப் பறக்கும் தேஜா தான் நதி நீர் இணைப்பை வைத்து அட்டகாசமான கதையைச் சொன்னாராம்.
கதை மிகவும் பிடித்துப் போய்விட தனது அடுத்த படத்தை ரஜினி முடிவு செய்துவிட்டாராம்.
தேஜாவை பெங்களூரில் வைத்து இருமுறை சந்தித்த ரஜினி, ஒருமுறை தனது நெருக்கமான நண்பர்களையும் வைத்துக் கொண்டு கதை குறித்து விவாதித்தார். பின்னர் கே.எஸ். ரவிக்குமாரையும் பெங்களூர் அழைத்து வந்து தேஜா சொன்ன கதை குறித்து நண்பர்களுடன் பேசினார்.
அனைவருக்கும் கதை பிடித்துப் போய்விடவே, குடும்பத்தோடு ஹைதராபாத் சென்ற ரஜினி தனது மகள்கள், மனைவி சகிதம் தேஜாவுடன் விவாதம் நடத்தினார்.
இதனால் விரைவில் விவசாயி நாமகரணத்துடன் ரஜினியின் அடுத்த படத்துக்கு பூஜை போடப்படலாம்.
- தேர்தலை குறி வைத்து ரஜினியின் அடுத்தபடம்