twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சுல்தானில் மூன்று ரஜினி!

    By Staff
    |

    Sultan the Warrior
    வருமா வராதா என்று ரஜினி ரசிகர்களே பட்டிமன்றம் நடத்திக் கொண்டிருந்த சௌந்தர்யா ரஜினியின் சுல்தான் தி வாரியர் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

    எந்திரன் படப்பிடிப்பை முடித்துவிட்ட ரஜினி, இப்போது மகளின் படத்தை முடிப்பதற்காக 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளார்.

    சுல்தான் தி வாரியர் படத்தில், அனிமேஷன் ரஜினி தவிர்த்து, இன்னொரு ரஜினியும் வருகிறார். அது நிஜ ரஜினி. குறிப்பிட்ட சில காட்சிகளில் அனிமேஷன் ரஜினியுடன் நிஜ ரஜினியும் வருவதுபோல படமாக்கியுள்ளாராம் சௌந்தர்யா.

    இந்த அசல் ரஜினி காட்சிகள் மட்டும் படத்தில் 20 நிமிடங்கள் இடம் பெறுகின்றனவாம்.

    இந்த இரண்டு ரஜினி தவிர, இன்னொரு ரஜினியும் படத்தில் இடம் பெறுவதாக சௌந்தர்யா தெரவித்துள்ளார்.

    "இந்த மூன்றாவது ரஜினி கேரக்டர் படத்தின் முக்கியமான சஸ்பென்ஸாக இருக்கும். முக்கியமான இன்னொரு விஷயம்... சுல்தான் தி வாரியர் எந்திரனுக்குப் பிறகுதான் ரிலீஸ். அதில் எந்த மாற்றமும் இல்லை..." என்கிறார் சௌந்தர்யா.

    இதற்கிடையே, சுல்தான் விவகாரத்தில் கோர்ட்டுக்குப் போவதாக அறிவித்த ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சு நடத்தி, கோர்ட்டுக்கு வெளியே விவகாரத்தை லதா ரஜினி முடித்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

    சுல்தான் படத்தைத் தயாரிக்கும் ஆக்கர் ஸ்டுடியோ தலைவர் லதா ரஜினிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X