Don't Miss!
- News ஜாபர் சாதிக் செல்போனில் முக்கியமான கான்டாக்ட்ஸ்? நீதிமன்ற காவலை நீட்டித்து கோர்ட் உத்தரவு!
- Sports ரசிகர்கள் என்ன பணம் கறக்கும் மெஷினா? ஆர்சிபி அணியின் செயல்.. கொந்தளிக்கும் கிரிக்கெட் ஆர்வலர்கள்
- Education இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் காத்திருக்கும் நர்ஸ் வேலை...!!
- Travel நீங்க உங்க குழந்தைகளோடு இன்னும் சென்னையில உள்ள இந்த பூங்காக்களுக்கு சென்றது இல்லையா – இப்போதே செல்லுங்கள்!
- Finance பெங்களூர் டூ லட்சத்தீவு.. இண்டிகோ-வின் நேரடி விமான சேவை, அடிதூள்.. டிக்கெட் விலை என்ன..?
- Lifestyle இந்த பிரபல சீரியல் கில்லர்களின் கடைசி வார்த்தைகள் அவங்க பண்ணுன கொலைகளை விட பயத்தை கொடுப்பதாக இருந்ததாம்...!
- Technology லிவ்வின் தம்பதியின் கைவரிசை.. போலி UPI ஆப்ஸ் மூலம் கட்டணம்.. தங்கம் திருடிய ஜோடி மாட்டியது எப்படி?
- Automobiles ரூ.199க்கு கார் கண்ணாடியா!! அதிக உறுதியான பின் பக்கத்தை பார்க்க உதவும் யுனோ மிண்டா-வின் கண்ணாடிகள் அறிமுகம்!
வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஆரம்பித்துவிட்ட ரஜினி!
உடல்நிலை சரியான பிறகு, ரஜினியைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது.
அப்படியும், தனது ராகவேந்திரா மண்டப அலுவலகத்தில் குறிப்பிட்ட சில நண்பர்களுடன் தினசரி உரையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் ரஜினி.
அடுத்து வெளியில் செல்லத் தொடங்கியுள்ளார். முன்பு மும்பைக்கு ஷூட்டிங் போனவர், அடுத்து தெரிந்த நண்பர்கள் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு செல்லத் தொடங்கியுள்ளார்.
பொதுவாக எந்தப் புதிய படம் வெளியானாலும் ரஜினி அதைப் பார்த்து பாராட்ட வேண்டும் என திரையுலகினர் எதிர்ப்பார்ப்பது வழக்கம். அவரும் அதைத் தவறாமல் செய்து, இளைஞர்களை ஊக்குவித்துவந்தார். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர் திரையரங்குக்கு வந்து படம் பார்ப்பது நின்று போனது. தனது சிஷ்யன் அஜீத்தின் படத்தையே அவர் தன் வீட்டில்தான் பார்த்தார்.
இப்போது அவர் பழையபடி சுறுசுறுப்பாக, இயல்பாக உள்ளதால் மீண்டும் வெளியில் வந்து படம் பார்க்க ஆரம்பித்துள்ளார்.
அப்படி அவர் பார்த்துள்ள முதல்படம் ஏ ஆர் முருகதாஸ் இயக்கியுள்ள ஏழாம் அறிவு. சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் அவர் இந்தப் படத்தை சமீபத்தில் பார்த்தார். அவருடன் மூத்த மகள் ஐஸ்வர்யாவும் வந்திருந்தார்.
ரஜினியை வரவேற்க படத்தின் ஹீரோ சூர்யாவும் அவரது மனைவி நடிகை ஜோதிகாவும் தியேட்டர் வாசலில் காத்திருந்தனர்.
படம் பார்த்து முடித்த ரஜினி, 'எக்ஸலென்ட்' என்று பாராட்டினார். முருகதாஸ், சூர்யா உள்ளிட்டோர் கடுமையாக உழைத்துள்ளதாகத் தெரிவித்தார். அவரை சூர்யாவும் ஜோதிகாவும் வழியனுப்பி வைத்தனர்.